districts

img

மலை கிராமங்களுக்கு தார்ச்சாலை வசதி கேட்டு மறியல்

தருமபுரி, ஜன.29- சித்தேரி மலை கிராமங்களுக்கு  தார்ச்சாலை வசதி ஏற்படுத்த வேண் டும் என வலியுறுத்தி மலைவாழ் பழங்குடியின மக்கள் கோபிநாதம் பட்டி சாலையில் அமர்ந்து மறிய லில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட் டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சி யில் 60க்கும் மேற்பட்ட குக்கிராமங் கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். சித் தேரி ஊராட்சிக்குட்பட்ட அரசநத் தம், கலசப்பாடி, கருக்கம்பட்டி உள் ளிட்ட 7 கிராமங்களுக்கு தார்ச் சாலை வசதி இல்லை. இங்கு மலை கிராமங்களுக்கு செல்வதற்கு பேதாதம்பட்டி ஊராட்சி, வாச்சாத் தியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் மண்சாலை வசதியுள்ளது. இந்த சாலையானது தற்போது குண் டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இத னால் இவ்வழியாக பயணிக்கும் மக் கள் விபத்துக்குள்ளாகி வருகின்ற னர். மேலும், அவசர தேவைக்குக் கூட வேகமாக செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, மலை கிரா மங்களுக்கு தார்ச்சாலை வசதி ஏற்ப டுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி  அரசநத்தம், கலசப்பாடி பகுதி யைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மலைவாழ் பழங்குடி யின பொதுமக்கள் 200க்கும் மேற் பட்டோர் அரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோபிநா தம்பட்டி கூட்டுசாலை சந்திப்பில்  அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மலை கிராமங்களில் வசிக்கும் விவ சாயிகள் வேளாண் விளை பொருட் களை எடுத்துச் செல்லவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெளியில் சென்று உயர்கல்வி படிக்கவும், முதியவர்கள், பெண் கள், வேலைத்தேடி வெளியில் செல் லும் இளைஞர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் தார்க்சாலை வசதி யில்லாததால் நாள்தோறும் அவதிக் குள்ளாகி வருவதாக தெரிவித்த னர்.  இதுகுறித்து தகவலறிந்து சம் பவ இடத்திற்கு விரைந்து வந்த  அரூர் துணை காவல் கண்காணிப் பாளர் ஜெகநாதன் உள்ளிட்ட அர சுத்துறை அதிகாரிகள் பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தை மேற்கொண் டனர். அப்போது இதுகுறித்து உட னடியாக நடவடிக்கை எடுக்கப்ப டும் என அதிகாரிகள் உறுதியளித்த னர். அதன்பேரில் போராட்டக்காரர் கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.