திருப்பூர், டிச.16- பஞ்சப்படி உயர்வை வழங்காததை கண்டித்து டிச.29 தேதி கோவை போக்குவரத்து கழக கோட்ட தலைமையகதிற்கு முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல சங்கம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூ தியர்கள் ஓய்வு பெறும் நாளில் பிஎப், கிராஜுவிட்டி போன்ற பண பலன்கள் எதையும் வழங்காததை கண்டித்தும், 8 ஆண்டு கலாக பஞ்சப்படி உயர்வை வழங்காததை கண்டித்தும், புத னன்று மக்களை சந்தித்து துண்டு அறிக்கை வழங்கினர். வரும் டிச.29 தேதி கோவை போக்குவரத்து கழக கோட்ட தலைமைய கதிற்கு முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.'