districts

உணவில் பல்லி: இருவருக்கு வாந்தி, மயக்கம்

கோவை, செப்.12- கோவை அருகில் தனியார் உணவகத்தில்  வாங்கிய பார்சல் உணவை சாப்பிட்டவர் களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கோவை மாவட்டம், அன்னூர் பகுதியை  சேர்ந்தவர் சாகுல். இவரது நண்பர் அப்துல்  ஹலீம். செவ்வாயன்று, அன்னூர்- கோவை  சாலையில் உள்ள தனியார் உணவகத் திற்கு சாகுல் சென்று சாப்பிட்டு விட்டு நண்ப ருக்கு பார்சலில் தோசை வாங்கியுள்ளார். அந்த தோசையை நண்பன் சாப்பிட்டுள் ளார்.  அப்துல் ஹாலீம் முதல் தோசை  சாப்பிட்டு முடித்த பின்னர் சாம்பாரை ஊற்றிய  போது அதில் பல்லி இறந்த நிலையில் கிடந் ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், பல்லி விழுந்த சாம்பாரை சாப் பிட்ட அப்துல் ஹலீம் மற்றும் சாகுல் இருவ ருக்கும் திடீரென வாந்தி, மயக்கம் மற்றும்  தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து   இருவரும் அன்னூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து  அன்னூர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்கு நேரில் சென்று  ஆய்வு நடத்தியதுடன் ஒரு வார காலத்திற்கு கடை நடத்த தடை விதித்துள்ளார்.