districts

img

அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

உதகை, பிப்.12- அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக் கள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் திங்களன்று பொதுமக்கள் குறைதீர் கூட் டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சி யர் அருணா தலைமை வகித்தார். அப்போது,  உதகை அன்பு அண்ணா காலனி ஊர் தலை வர் மாதேவன் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனு வில் கூறிருப்பதாவது, உதகை நகராட்சி, 35 ஆவது வார்டுக்குட்பட்ட அன்பு அண்ணா காலனியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும் பங்கள் உள்ளன. எங்கள் பகுதியில் வசிப்ப வர்கள் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளர்கள். இப்பகுதியில் அடிப்படை வசதிகளான கழிவுநீர் கால்வாய், குடிநீர்,  தெருவிளக்கு உள்ளிட்டவை நிறைவேற்றப் படவில்லை. மேலும், மயானம் புதர்மண்டி  கிடக்கிறது. எனவே, அடிப்படை வசதிகளை  நிறைவேற்றி தர வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உதகை சிவ சக்தி நகர் பொதுமக்கள் மாசடைந்த தண்ணீ ருடன் வந்து கொடுத்த மனுவில், குந்தா தாலுகா, பிக்கட்டி பேரூராட்சிக்குபட்ட சிவ சக்தி நகர் பகுதியில் சுமார் 300 குடும்பங் கள் உள்ளன. இப்பகுதிக்கு குடிநீர் அரு கில் உள்ள காட்டாற்றில் இருந்து விநியோகிக் கப்படுகிறது. இந்த பகுதியில் சுத்திகரிக்கப் படாத தண்ணீர் கருப்பு நிறத்தில் விநியோகிக் கப்படுகிறது. எனவே, சுத்தமான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என  வலியுறுத்தப்பட்டுள்ளது. கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டியில் பவர் லிப்டிங் போட்டியில் பதக் கம் வென்ற நீலகிரி மாவட்டம், ஜெகதளா பேரூராட்சி, குண்டாடா கிராமத்தைச் சேர்ந்த  மாற்றுத்திறனாளி சரவணன் (35) ஆட்சி யரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் குண் டாடா பகுதியில் சாலை வசதி இல்லை.  இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ,  மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, சாலை வசதி ஏற்படுத்தி தரவேண் டும். மேலும், இப்பகுதியில் பட்டா இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதைய டுத்து, இந்த மனுக்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என துறை சார்ந்த  அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டார்.