திருப்பூர், ஜன. 6 - ஊத்துக்குளி வட்டம், வடுகபாளையம் கிராமத்தில் உள்ள நிலங்களை வஃக்ப் வாரிய நிலமென கூறி ஊத்துக்குளி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய உள்ள தடையை நீக்க கோரி பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் மனு அளித்தனர். ஊத்துக்குளி வாரச்சந்தை வளாகத்தில், வெள்ளியன்று அவர்கள் ஒன்று கூடி ஊர்வலமாக சென்று ஊத்துக்குளி சார்பதிவாளரிடம் தடங்கல் நீக்க கோரி மனு அளித்தனர். சமீபத்தில் வஃக்பு வாரியம், ஊத்துக்குளி பத்திர பதிவு அலுவலகத்தில் அளித்த தடங் கல் மனு காரணமாக ஊத்துக்குளி வட்டம், வடுபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பி.ராம மூர்த்தி நகர், கே.கே.நகர், செந்தில் நகர், சரசு வதி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளி லும், விவசாய நிலங்களிலும் (சுமார் 70 ஏக்கர்) எவ்விதமான பத்திரப்பதிவு நடவடிக்கை களை மேற்கொள்ள இயலவில்லை. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர். ஆண்டாண்டு காலமாக உரிய ஆவணங்களை வைத்து அனுபவித்து வரு கின்றனர். ஆகவே, இந்த நிலப் பிரச்சினை யால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், குடியிருப்புவாசிகள், விவசாயிகள், 300க்கும் மேற்பட்டோர் வேதனையுடன் தங்கள் நிலத் திற்கு வஃக்ப் வாரியத்தால் செய்யப்பட் டுள்ள தடங்கல் மனுவை விலக்க கோரி வெள் ளியன்று மனு அளித்தனர். தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் தெரிவித்தனர். இல்லையென்றால் தங்களது வாழ்வுரி மையை பாதுகாக்க வலுவான போராட்ட நட வடிக்கைகளை எடுப்போம் என்றும் தெரி வித்தனர்.