பள்ளிபாளையம், ஜன.24- சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனு மதி வழங்க வேண்டும் எனக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியு றுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாடுபிடி வீரர் களும், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களும் மனு அளித்த னர். அம்மனுவில், மார்ச் 3 ஆம் தேதியன்று சேந்தமங்க லத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி அளிக்க வேண் டும். தமிழ்நாடு அரசு அறிவிக்கின்ற அனைத்து விதிமுறை களையும் முழுமையாகக் கடைப்பிடித்து, ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு, நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம். என்று அந்த மனுவில் குறிப்பிடபட்டுள்ளது. இதுசம்பந்த மாக அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு, ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கான பரிந்துரையை அரசுக்கு தெரிவிப்பதா கவும், அரசு அனுமதி பெற்று தங்களின் கோரிக்கையை நிறை வேற்றி வைக்கப்படும் என ஆட்சியர் கூறியதாக சேந்த மங்கலம் ஜல்லிக்கட்டு விழா சங்கத்தின் தலைவர் பி.மணி கண்டன் கூறினார்.