districts

img

மருத்துவப் படிப்பு கிடைத்தும் கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை

தருமபுரி, பிப்.14- மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்தும், கல்வி கட்டணம் செலுத்த  முடியாததால், கல்வி உதவித்தொகை  கேட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி மனு அளித் துள்ளார். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த  இவரின் மகள் திவ்யதர்சினி (20). இவர் 10 ஆம் வகுப்பு தேர்வில் 491 மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1010 மதிப்பெண் களும் பெற்று மருத்துவ கல்விக்கான நீட் தேர்வை எழுதினார். இதில் 427 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு சென்ற திவ்யதர்சினிக்கு பல் மருத்துவ படிப் புக்கு தனியார் கல்லுாரியில் இடம் கிடைத்தது. ஆனால், தனியார் கல்லுாரியில் விடுதிக் கட்டணம், கல்விக் கட்டண மாக ஒவ்வொரு ஆண்டும் வருடத் திற்கு ரூ.4.5 லட்சம் செலுத்த வேண்டும் என்பதால் மருத்துவக்கல்வி கனவு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, கல்விக் கட்டணத்திற்கு உதவி செய்ய  வேண்டும் எனக்கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிருஷ்ண வேணி, மகள் திவ்யதர்சினி ஆகியோர் மனு அளித்தனர்.