districts

சிறுமி வன்கொடுமை: குற்றவாளியை கைது செய்யக்கோரி எஸ்பியிடம் மனு

தருமபுரி, மே 18- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை கைது  செய்ய வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தயார், மாதர் சங்க தலைவர்களுடன் தருமபுரி மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் மனு அளித்தார். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே அருந்ததிய சமூக  தம்பதியருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இத்தம்பதியர், கூலி வேலைக்காக பெங்களூர் சென்று அங் கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இவரது மகன்கள் மற்றும் மகள் பாட்டி வீட்டில் தங்கியுள்ள னர். சிறுமி அதே கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து வருகி றார். இச்சூழ்நிலையில் இதே கிராமத்தை சேர்ந்த சிறைத் துறையில் வார்டனாக பணியாற்றும் பார்த்திபன் என்பவர், சிறு மியை, வலுகட்டாயமாக தூக்கி சென்று பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். மேலும், இதை வெளியில் சொன் னால் உன்னையும் உன் குடும்பத்தையும் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். சில மாதங்கள் கழித்து சிறுமிக்கு உடல்நிலை சரியில்லா மல் போகவே, இவரின் தயார் சேலம் அரசு மருத்துவம னைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோ தனை செய்த மருத்துவர்கள், 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் கேட்டபோது, நடந்த சம்பவத்தை சிறுமி தெரி வித்துள்ளார். இதனையடுத்து, இச்சம்பவத்திற்கு காரனமான பார்த்திபன் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமி யின் தயார் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகா ரளித்தார். இதையடுத்து போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் கடந்த ஏப்.24 ஆம் தேதியன்று வழக்குபதிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை. புகார் அளித்த பிறகு சம்பந்தப்பட்ட நபர் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து வருகி றார். எனவே குற்றசெயலில் ஈடுபட்ட பார்த்திபனை கைது  செய்ய வேண்டும். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்  என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மாதர் சங்க தலைவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் மனு அளித்தார். இதில் மாதர் சங்க மாவட்ட செய லாளர் ஆர்.மல்லிகா, முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ். கிரைஸாமேரி, மாதர் சங்க நகர செயலாளர் நிர்மலா ராணி,  ஒன்றிய செயலாளர் தமிழ்மணி ஆகியோர் உடனிருந்தனர்.