தாராபுரம், ஆக.14 - தாராபுரம் அருகே பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. தாராபுரம் அருகே உள்ள சோமனூத்து மேற்கு அரிசன காலனியில் சுமார் 45 குடும்பங் களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நி லையில் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து பாதையில் உள்ள ஆக்கிர மிப்பை அகற்றக்கோரி தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலூக்கா செயலாளர் என். கனகராஜ் தலைமையில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தாரா புரம் வட்டம், சின்னக்காம்பாளையம் பேரூ ராட்சி சோமனூத்தில் உள்ள மேற்கு அரிசன காலனி அருகில் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகவே ஊருக்குள் செல்லமுடி யும். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த கனகு என்பவர் தனது சொந்த பயன்பாட்டுக் காக பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை யில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக 4 அடி வரை ஆக்கிரப்பு செய்துள்ளார். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள் ளது. எனவே இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட் டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கோட் டாட்சியர் செந்தில் அரசன் உரிய விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.