சேலம், செப்.4- அதிக உப்புத்தன்மை கொண்ட குடிநீரை குடிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புக ளுக்கு தமிழக அரசு உரிய நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா கிழக்கு ராஜா பாளையம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெரு, ஆதிதிராவிடர் காலனி, போயர்தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தின் கடைசி எல்லையான இப்பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு விவசாயம் தொடர்பான வேலைகள் இல்லை. பெரியளவில் வேறு எந்த வேலைவாய்ப்புகளும் இப்பகுதி மக்களுக்கு கிடைப்பதில்லை. வாழ் வாதாரத்தை பூர்த்தி செய்ய கிடைக் கின்ற வேலையை செய்து வாழ்ந்து வரும் இவர்களுக்கு சுகா தாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் போர் வெல் மற்றும் கிணறுகளில் கிடைக் கின்ற உப்புத்தன்மை மிகுந்த தண்ணீரை கொண்டு சமைக் கின்றனர். மேலும் இந்த குடிநீரை பருகி வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்களின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் 25 முதல் 40 வயதுடைய திருமணமான 39 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது 26 பேருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளை மேற் கொண்டு வருகின்றனர். பலர் ரத்த பரிசோதனைகளும் செய்து உள்ளனர். அடுத்து என்ன நடக்கு மோ என்று தெரியாத வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் மற்றும் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளனர். கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு மேட்டூர்- ஆத்தூர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வீரகனூரில் இருந்து லத்துவாடி வழி யாக கிழக்கு ராஜபாளையம் கிராமத் திற்கு குழாய் மூலம் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந் நிலையில் இரண்டு ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. ஆனால் 3 கி.மீ., அப்பால் உள்ள லத்துவாடிக்கு தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர் வாகம் உடனடியாக இப்பிரச் சனையில் தலையிட்டு கிழக்கு ராஜ பாளையத்திற்கு காவிரி குடிநீர் விநி யோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் கிழக்கு ராஜ பாளையம் பகுதி மக்கள், தங்கள் பிரச்சனைகள் குறித்து தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசுத் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாவட்ட நீரியல் நிபுணர்கள் உள்ளிட்டு அனைத்து உள்ளாட்சி அமைப்பு களுக்கு புகார் மனு அளித் துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. மக்களின் அடிப் படைப் பிரச்சனைகளான சுகாதார மான குடிநீர் வசதி ஏற்படுத்தும் வகையில் லத்துவாடியில் இருந்து கிழக்கு ராஜபாளையம் பகுதிக்கு காவிரி குடிநீரை கொண்டு செல்ல வேண்டும். இங்குள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் நீர் நிலைகளை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும் பொது மக் களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு களுக்கு மருத்துவ அலுவலரை நிய மித்து உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்திப்பட்டது. இருப்பினும் இதுவரை அந்த மனு மீது உரிய விசாரணை நடத்தப் படாமல் தொடர்ந்து பாதிக்கப் பட்ட மக்கள் தரமில்லாத குடி நீரை குடித்து வருகின்றனர். இதனால் மீண்டும் மாவட்ட ஆட்சியரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமையில், கெங்கவல்லி தாலுகா செயலாளர் ஜோதிகுமார் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனுவை அளித்தனர்.