districts

img

பிரதமருடன் சந்திப்பு

புதுதில்லி, ஜூன் 15- பிரதமர் நரேந்திர மோடி யை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிலு வைத் தொகை, வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவினையும் அளித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கின் 15ஆவது கூட்டம் சனிக் கிழமையன்று ஜூன் 15 தில்லி யிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தி லிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக் குமார், தலைமைச் செயலா ளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயரதிகாரிகள் தில்லி சென்றனர். நிதி ஆயோக் கூட்டம் தொடங்குவதற்கு முன்ன தாக பிரதமர் நரேந்திர மோடி யை அவரது இல்லத்தில் சந் தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகள் உள் ளிட்ட பல்வேறு விவகாரங் கள் குறித்து அவரிடம் ஆலோ சனை நடத்தினார். தமிழ கத்திற்கான வளர்ச்சித் திட் டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகளை வழங்கக்கோரும் கோரிக்கை கள் அடங்கிய மனுவினை யும் பிரதமரிடம் சமர்ப்பித் தார். குறுகிய நேரம் மட்டும் நடந்த இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்திக்காமலேயே முதல்வர் பழனிசாமி புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர் மலா சீதாராமனையும் முதல் வர்  பழனிசாமி சந்தித்தார். விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலை யில், தமிழகத்திற்கான நிதி விவகாரங்கள் தொடர்பாக வும், கூடுதல் திட்டங்கள் ஒதுக்கும்படி அவரிடம் கோரி க்கை விடுத்தார்.