districts

img

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் பயின்றவர்களிடம் பணம் கேட்பதா?

சேலம், ஏப்.3- கல்வி உரிமை சட்டத்தில் சேர்ந்த மாண வர்களிடம் கட்டணம் கேட்டு தொல்லை செய் யும் சேலம் மெய்யனூரில் உள்ள  ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி தலையிட கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது .  ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் எண்ணற்ற மாணவ மாணவிகள் கல்வி பயின்று வரு கின்றனர். இதில், சிலர் கட்டாய கல்வி உரி மைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு பயின்று  வருகின்றனர். தற்போது மாணவ மாணவி களிடம் கல்வி கட்டணம் கேட்டு பள்ளி நிர் வாகத்தினர் தொடர்ந்து தொல்லை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட் டாய கல்வி உரிமைச்சட்டத்தில் சேர்ந்த மாண வர்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையை தனியார் பள்ளி கைவிட வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், வாலி பர், மாணவர் சங்கத்தினர் மனு அளித்தனர். இவர்களுடன் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற் பட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உடனிருந்தனர்.  இதில் வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் வி.வெங்கடேஷ், மாநகர பொரு ளாளர் மனோகரன், மாநகர உறுப்பினர் கார்த்தி, மாணவர் சங்கம் மாவட்டத் துணைச் செயலாளர் டார்வின், மாவட்ட குழு உறுப்பி னர் கோகுல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.