தருமபுரி, நவ-25, நாட்டு கறவை மாடுகள் வழங்கக் கோரி நூற்றுக்கும் மேற் பட்ட பெண்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் திங்களன்று மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம் கொண்டகர அள்ளி ஊராட்சிக்குட் பட்டது வத்தல்மலை இங்கு 10 க்கும் மேற்பட்ட குக்கிராமங் கள் உள்ளன. இங்கு பெரும்பகுதி பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு விவசாய நிலம் இல்லை கூலி வேலை செய்கின்றனர். பெண் கள் வாழ்வாதாரத்திற்காக நாட்டின கறவை மாடுகள் வழங்கி னால் இதன் மூலம் இவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் அழிந்து வரும் நாட்டின மாடுகள் மேலும் உற்பத்தியா கும் எனவே வறுமைகோட்டின் கீழ் வாழும் பழங்குடி பெண்க ளுக்கு 100 சதவீத மானியத்தில் நாட்டின கறவை மாடுகள் வாங்க பழங்குடி நலத்துறையின் கீழ் வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.