districts

img

சட்டவிரோத மதுக்கூடங்கள் மீது நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் -டாஸ்மாக் ஊழியர்கள் மனு

ஈரோடு, ஜூன் 30-  சட்டவிரோத மதுக்கூடங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு  ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தி னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு  அளித்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்த  மனுவில் தெரிவித்திருப்பதாவது,  சட்ட விரோதமாக செயல்படும் மதுக்கூ டங்களை நடத்துபவர்கள் மீது பலமுறை  டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மற்றும் காவல் துறைக்கும் புகார் செய்துள்ளோம். எந்த பல னும் இல்லை. இதன் காரணமாகவே சட்ட விரோத மதுக்கூடம் நடத்துபவர்களால் ஊழி யர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது, ஆய் வுக்கு வந்த அதிகாரிகளையே சிறை பிடித்து வைத்தது, சட்ட விரோதம் மதுக்கூடம் நடத்து பவர்களுக்கு எதிரானவர்கள் என்கிற கார ணத்தால் ஊழியர்கள் தாக்கப்பட்டதும், தாக் குதலுக்குள்ளான கடை ஊழியர்கள் மீதே காவல் துறை பொய்வழக்கு போட்டது

, இதை  காரணம் காட்டி ஊழியர்களை பணியிட மாற் றம் செய்தது, இவ்வாறான பணியிட மாற்றத் திலும் பாரபட்சமாக நடந்து கொண்டது என்று  கடந்த காலத்தில் இருந்தது. இப்போதும் தொடர்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவான மேற்பார் வையாளர்களுக்கும், பார் நடத்துவோர்க ளுக்கும் சாதகமாக நடக்காத மற்றும் பிடிக் காதவர்கள் எனில் கடை பணியில் தொடர முடி யாது. பணி மாறுதல் செய்யப் படுவார். பணி யிட மாறுதல் கூட மதுபானக் கிடங்கு போன்ற  இடங்களுக்குத் தான் மாறுதல் செய்யப்படு வார் என்கிற நிலைமையும் இன்றும் தொடர்கி றது. மேலும் தொழிற்சங்க நடவடிக்கையை முடமாக்க வேண்டும் என்பதற்காகவும் கடந்த ஆட்சி காலத்தைப் போல தற்போதைய ஆட் சியிலும் தொடர்ந்து நீடிக்கிறது. மாவட்ட நிர் வாகம் உடனடியாக தலையிட்டு மதுக்கூடங் களில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக் கைகளை தடுத்து நிறுத்தவும், ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  முன்னதாக மனு கொடுக்கும் நிகழ்வின் போது சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரம ணியன் உடனிருந்தார். முன்னதாக ஈரோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு சார்பில் வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத் தம் அருகில் நகரக்குழு உறுப்பினர் சி.கே.முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.