தருமபுரி, ஏப்.18- மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்நோக்கு சுகாதார பணியா ளர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்ய தர்சினியிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக பல்நோக்கு சுகா தார பணியாளர்கள் 20க்கும் மேற்பட் டோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்ய தர்சினியிடம் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு சுகாதார மருத்துவ பணி யாளராக 37 பேரும், தொழில்நுட்ப ஆய்வக பணியில் 9 பேரும் பணியாற்றி வந்தோம்.இந்நிலையில், அண்மையில் எங்களை பணியில் இருந்து நீக்கம் செய்தனர். ஏழை குடும்பத்தில் இருந்து வந்த நாங்கள் வேலையின்றி தவித்து வருகிறோம். எனவே, எங்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கோரியுள்ளனர்.