அவிநாசி, டிச.30- அவிநாசி அருகே ஸ்ரீ லட்சுமி கார்டன் பகுதியில் அடிப் படை வசதிகள் செய்து தரக்கோரி வியாழனன்று ஊராட்சி மன்ற தலைவரிடம் மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர். அவினாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட் சிக்குட்பட்ட, ஸ்ரீ லட்சுமி கார்டன் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி யில் இவர்கள் ஆற்று குடிநீர், ஆழ்துழாய் தண்ணீர், தெரு விளக்கு, சாலை வசதி, சாக்கடை வசதி உட்பட அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பல வருடங்களாக வசித்து வரு கின்றனர். இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் எந்தவித நட வடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆகவே அடிப்படை வசதிகளை உடனடியாக நிறை வேற்றி தருமாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வேலுச்சாமி இடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இதில் மாதர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் செல்வி உட்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.