districts

img

பேருந்து வசதி கேட்டு அரசுப்பள்ளி மாணவர்கள் மனு

சேலம், செப்.4- பள்ளி செல்ல பேருந்து வசதி கேட்டு மாணவர்கள், பொதுமக்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை கிராமத் தைச் சேர்ந்த 11ஆவது  வார்டு உறுப்பி னர் ஜெயலட்சுமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் சேலம் ஆட்சியர் அலு வலகத்தில் அளித்த மனுவில் தெரி வித்துள்ளதாவது, கூடமலை அருகே சித்தன் பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கிறோம். அந்த பகுதியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே துவக்கப்பள்ளி உள்ளது. ஆறாம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால் கூடமலை பகுதிக்கு தான் செல்ல வேண்டும். அந்தப் பள்ளிக்கு  செல்ல வேண்டும் என்றால் மூன்று  கிலோமீட்டர் உள்ளது. தற்போது எங் கள் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள்  கூடமலையில் உள்ள மேல்நிலைப் பள்ளி செல்வதற்கு அரசு மற்றும் தனி யார் பேருந்து இல்லை. பேருந்து வரா ததற்கு காரணம் எங்கள் கிராமப் பகு தியில் சாலை முழுவதும் குண்டும்,  குழியுமாக உள்ளதால் பேருந்துகள்  வர முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் கூடமலை பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல மாண வர்கள் நடந்தே செல்கின்றோம். இத னால் பள்ளிக்கு தாமதம் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவ டிக்கை எடுத்து மாணவர்கள் பள் ளிக்கு செல்ல பேருந்து வசதி ஏற்ப டுத்தி தர வேண்டும் என அதில் தெரி வித்துள்ளனர்.  

ஈரோடு இதேபோன்று, ஈரோடு மாவட் டம், மொடக்குறிச்சி வட்டத்திற்குட் பட்டது அட்டவணை அனுமன்பள்ளி கிராமம். இதில் அண்ணா நகர்,  வேமாண்டம்பாளையம், வெள்ளி வலசு, காமராஜபுரம், ஊஞ்சப்பா ளையம், பழையபாளையம் மற்றும்  முருங்கத்தொழுவு ஆகிய ஊர்கள்  அடங்கும். இப்பகுதி மக்கள் வெளி யூர்களுக்குப் போக அரச்சலூர்  செல்ல வேண்டும். இக்கிராமங்களுக் குச் செல்ல வழித்தடம் எண்.33 மற்றும் 34 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மறுமார்க்கமாக செல் லும்போது எதிர்பேருந்துகள் பள்ளத் துக்கடை பேருந்து நிறுத்தத்தில் மற்ற பேருந்தைப் பிடித்து ஊருக்குச் செல்வர். இவ்வாறு செல்லும்போது வழித்தட எண்.33 கொண்ட பேருந்து உரிய நேரத்திற்குப் புறப்படுவ தில்லை. இதனால் 34ஐ பிடிக்க முடிய வில்லை. இதனால் 6 கிமீ நடந்து  செல்ல வேண்டிய நிலை ஏற்படுகி றது. ஆகவே சற்று விரைவாகச் சென் றால் அந்த பேருந்தை பிடிக்க முடி யும் என ஓட்டுநரிடம் கூறினால், இல வசமாகச் செல்பவர்களுக்கு என்ன அவசரம் என்று கேட்கிறார். எனவே மக்கள் சிரமத்தைக் கவனத்தில் கொண்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஆவண செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவ லரிடம் மாணவ, மாணவிகள் மனு கொடுத்தனர்.