அவிநாசி,பிப்.17- அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு அரசாணை படி ஊதியம் வழங்க கோரி, சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளியன்று மனு அளித்தனர். அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு பணியமர்த்தப்பட்ட தூய்மை பணியாளர் களை சிறப்பு காலம் முறை ஊழியர்களாக்கி ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து 2000 ஆம் ஆண்டுக்கு பின் பணியமர்த்தப்பட்ட ஓஎச்டி ஆப்ரேட்டர்க ளுக்கு 7 வது ஊதிய குழுப்படி ஊதியம் வழங்க வேண்டும். இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் மூலம் செப்.9 2022 ஆம் ஆண்டு குறிப்பானை வழங்கப்பட்டுள்ளது. முன்பே ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டும், ஜன.15 2023 ஆம் ஆண்டு இதை நினைவூட்டி குறிப்பானையும் மாவட்ட நிர்வாகம் அனுப் பியுள்ளது. இதன்படி தூய்மை பணியாளர்களுக்கும், ஓஎச்டி ஆப்ரேட்டர்களுக்கும் குறிப்பானை மற்றும் அரசாணை படி யான ஊதியங்களை நிர்ணயித்து வழங்குமாறு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். இம்மனுவை பெற்றுக் கொண்டு அதிகாரிகள் விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளனர். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே. ரங்கராஜ், மாவட்டத் துணைத் தலை வர் உன்னிகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, ஒன் றிய கவுன்சிலர் முத்துசாமி, விவசாய தொழிலாளர் சங்கத் தின் ஒன்றிய நிர்வாகி பழனிச்சாமி, கட்டிட கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.