கோவை, ஜூலை 15- கோவை பெரிய கடைவீதி, பகுதியில், சாலையோர நடைபாதையில் சிறுவியாபாரி கள் கடை அமைக்க அனுமதி வழங்கக்கோரி மாநகர காவல் துறை துணை ஆணணயரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், பெரிய கடைவீதி பகு தியில் சாலையோர சிறு வியாபாரிகள் 30க் கும் மேற்பட்ட நபர்கள் சுமார் 10 ஆண்டுக ளுக்கு மேலாக கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக கடை அமைக்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் நடைபாதை சிறு வியாபாரிகள், மிகவும் பாதிக்கப்பட்டுள் ளனர். இக்கடைகளை நம்பி 30க்கும் மேற் பட்ட குடும்பங்கள் உள்ளன. எனவே, நடை பாதை சிறு வியாபாரிகளுக்கு மீண்டும் அதே இடத்தில் கடை அமைக்க காவல் துறை அனுமதி வழங்க வேண்டுமென்று மனித நேய வணிகர் சங்கம் சார்பில் திங்களன்று, கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சரவணக்குமாரை நேரில் சந்தித் துமனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உடன டியாக மறுசீலனை செய்யப்படும் என காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, இந் நிகழ்வில், மனிதநேய மக்கள் கட்சி மாவட் டத் தலைவர் சர்புதீன், மாவட்டச் செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்டச் செயலாளர் முஜீப் ரஹ்மான், எம்விஎஸ் மாவட்டச் செய லாளர் ஹாரூன், பொருளாளர் நோபல் உட்பட 100 மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.