உதகை, ஜூலை 8– பழங்குடியின மக்களுக்கு ஒதுக் கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதி கோரி கோத்தர் பழங்குடி யின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திங்களன்று மனு அளித்த னர். இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, பழங்குடி இன மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஆங்கிலேயர் ஆட் சிக் காலத்தில், 1800 ஏக்கர் விவசாய நிலம் ஒதுக்கப்பட்டது. இது ஒவ் வொரு குடும்பத்திற்கும் தனித்தனி யாக பிரித்து கொடுக்கப்பட்டது. அதன்படி பழங்குடி இன மக்க ளாகிய நாங்கள் விவசாயம் செய்து வந்தோம். விவசாயத்தை ஒட்டியே கால்நடை வளர்ப்புக்கும் இந்த இடம் எங்களுக்கு சவுகரியமாக இருந்தது. ஆண்டாண்டு காலமாக எங்கள் குலத் தொழில் அழியாமல் காக்கப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுக ளாக எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத் தில் விவசாயம் செய்ய வனத்துறையி னர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக் கின்றனர். கால்நடைகளை மேய்ச்ச லுக்கு மட்டுமே அழைத்து வரவேண் டும் என நிர்பந்திக்கின்றனர். எங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் விவ சாயம் செய்யாமல் மேய்ச்சலுக்கு மட் டும் எவ்வாறு நாங்கள் பயன்படுத்த முடியும். இதனால், எங்கள் குடும்ப பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள் ளது. எனவே, ஆங்கிலேயர் காலத்தில் ஒதுக்கியுள்ள 1800 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய வனத்துறையினர் அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட் சியர் இந்த மனுவின் மீது உரிய விசா ரணை நடத்த வனத்துறையினர்க்கு உத்தரவிட்டார்.