திருப்பூர், நவ. 14 - திருப்பூர் மாவட்டம், தொரவலூர் ஊராட்சிக்கு உட்பட்டடி.ஆண்டி பாளையம் குட்டைக் கருப்ப ராயன் கோவில் பகுதியில் மோசமான நிலையில் உள்ள சாலைகளை செப் பனிட்டுத் தருவதுடன், பேருந்து வசதியை அதிக ரிக்கவும் மாவட்ட ஆட்சி யரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித் தனர். டி.ஆண்டிபாளையம், குட்டைக்கருப்ப ராயன் கோயில் பகுதியைச் சேர்ந்த மக்கள் இது தொடர்பாக திங்களன்று ஆட்சிய ரகத்தில் மனு அளித்த பின் கூறியதாவது: டி. ஆண்டிபாளையம் கணபதிநகர், கோல்டன் நகர், திருமுருகன் நகர் ஆகிய பகுதிகளில் 600க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வரு கின்றனர். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. எனவே இந்த சாலை களை செப்பனிட்டு புதிய தார்ச்சாலை அமைத்துத் தர வேண்டும். மேலும் திருப்பூர் முதல் நம்பியூர் வரை செல்லக்கூடிய 26 ஏ, 26 பி, 26 ஏ/சி ஆகிய அரசுப் பேருந்துகள் கொரோனா பொது முடக்கத்திற்கு முன்பு எங்கள் பகுதியில் 45 நிமிடத்திற்கு ஒரு முறை வந்து கொண்டி ருந்தன. தற்போது ஒரு வருடத்திற்கு மேலாக 2 மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே பேருந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் பொது மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும், மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்குச் செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர். இப்பகுதி திருப்பூர் எல்லையில் இருப்ப தால் நம்பியூர் பணிமனையில் இருந்து குறை வான எண்ணிக்கையில்தான் பேருந்து வரு கிறது. எனவே திருப்பூர் பணிமனையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் பொது மக்களும், மாணவ, மாணவிகளும் பயனடைவார்கள் என்று கூறினர்.