கோவை, மார்ச். 9- மழைநீரை சேகரித்து வைத்து வேளாண்மைக்கு பயன்படுத்துவதில் தமிழக வேளாண் முன்னோடிகள் தனித் தும் வாய்ந்தவர்களாக இருந்திருக் கின்றனர் என இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை செயலாளர் மனோஜ் அகுஜா பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்க லைக்கழகத்தின் 43 ஆவது பட்டமளிப்பு விழா, பட்டமளிப்பு விழா அரங்கில் சனி யன்று நடைபெற்றது. துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வரவேற்றார். பல்க லைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இதில், மத்திய வேளாண்மை, உழ வர் நலத்துறை செயலர் மனோஜ் அகுஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தின் உழைக்கும் வர்க்கத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் உழவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். மழைநீரை சேக ரித்து வைத்து வேளாண்மைக்கு பயன்ப டுத்துவதில் தமிழக வேளாண் முன்னோ டிகள் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். காவிரி டெல்டா பாசனத்திட்டம், உலகின் பழைமை யான நீர்மேலாண்மைத் திட்டங்களில் ஒன்றாக இருந்துள்ளது.
தமிழ்நாட்டின் வேளாண் மேம்பாட் டுக்கு, இந்த வேளாண்மை பல்கலைக்க ழகம் அளப்பரிய பங்காற்றி வருகிறது. இப்பல்கலைக்கழகம் சார்பில் இது வரை 929க்கும் மேற்பட்ட பயிர் ரகங் கள், சுமார் 1,500 தொழில்நுட்பங்கள், 160 கருவிகள் கண்டறியப்பட்டு உழவர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்திய வேளாண் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 1950 இல் 5 கோடி டன்களாக இருந்த உணவு தானிய உற் பத்தி, 2020 இல் 32.96 கோடி டன்க ளாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் இது உப ரியாக இருந்தாலும் 2050 ஆம் ஆண் டில் மக்கள் தொகை 166 கோடியாக உய ரும்போது, தற்போதைய உற்பத்தி யைக் காட்டிலும் 60 சதவீதம் கூடுத லாகத் தேவைப்படும். அதற்கேற்ப இப் போதே திட்டமிட வேண்டியது அவசி யம். வரும் 2047 இல் இந்தியா உலகிற் குத் தலைமை வகிக்க வேண்டுமானால் உணவு உற்பத்தியில் நவீன தொழில் நுட்பங்களை சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதேநேரம் நீடித்த நிலை யான வேளாண் முறைகளைப் பின்பற் றுவதன் மூலம் நிலம், நீர், சூழல் மாச டைவதைத் தடுக்க முடியும். நீரின் தேவை அதிகரிக்கும் நிலையில் வறட் சியைத் தாங்கி வளரக் கூடிய பயிர் வகை களைக் கண்டறிய வேண்டியது அவசி யம். அதேபோல் பல்வேறு வகையான பயிர்களை நாடு முழுவதும் பரவலாகப் பயிரிடுவது, விநியோகச் சங்கிலியைக் கட்டமைப்பது, விவசாயிகளுக்கு கல்வி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி களை வழங்குவது என பல்வேறு துறை களில் கவனம் செலுத்த வேண்டியுள் ளது. சீனாவைக் காட்டிலும் 30 சதவீதம் கூடுதலாக பயிர்ப் பரப்பளவு, 67 சதவீ தம் கூடுதல் மழைப் பொழிவு இருந்தா லும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத் தியில் விவசாயத்தின் பங்களிப்பு மூன் றில் ஒரு பங்காகவே உள்ளது. இந்தியா வில் பயிர் உற்பத்திக்கும் உற்பத்தித் திற னுக்குமான இடைவெளி வளர்ந்த நாடுக ளுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாக உள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பங் களைப் பயன்படுத்துவது, உயர்தர விதைகள், உரங்கள், இயற்கை வளங் களை திறம்பட நிர்வாகம் செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்தினால் இந்த இடைவெளியைக் குறைக்க முடி யும் என்றார். நிகழ்வில், பல்கலைக்கழகம், இணைப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த பிஹெச்.டி., முதுநிலை, இளநிலை பட் டப் படிப்புகளை முடித்த 3,720 பேர்க ளுக்கு பட்டங்கள், பதக்கங்கள் வழங் கப்பட்டன. பல்கலைக்கழக பதிவாளர் இரா.தமிழ்வேந்தன், தேர்வுக் கட்டுப் பாட்டாளர் வி.பாலசுப்பிரமணி, முதன் மையர்கள் ந.வெங்கடேச பழனிசாமி, ந. செந்தில் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.