ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி
தருமபுரி டிச-5, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 21,000 கன அடியாக உள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கு வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 3 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஃபென்ஜால் புயல் காரணமாக தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 43,000 கனஅடி வரை அதிகரித்து இருந்தது. நீர்வரத்து அதிகரித்ததால் ஒகே னக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் சுற்று லாப் பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்த கார ணத்தால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரி சல் இயக்குவதற்கு கடந்த இரண்டு நாட்களாக விதிக்கப் பட்டு இருந்த தடையை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நீக்கியதை அடுத்து, சின்னாறு பரிசல் துறையிலிருந்து கூட் டாறு, மணல்மேடு வரை பரிசல்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள் ளது. ஒகேனக்கல் வந்திருந்த சொற்ப அளவிலான சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்ட னர்.
இருப்பினும் நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்ந்து 3 ஆவது நாளாக நீட்டிக்கப் பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழக, கர் நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர்.
போலி பாஸ்போர்ட் - பெண் கைது
கோவை, டிச.5– சிங்கப்பூரில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் கோவை வந்த, ஆந்திரா மாநிலப் பெண்ணை விமான நிலைய அதி காரிகள் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும் சிங்கப்பூர் மற்றும் துபாய் மூலம் ஏராளமான பயணிகள் வந்துச் செல்கின்றனர். குறிப்பாக கோவை மட்டுமின்றி பிற மாவட்டங் களுக்கு செல்லும் பயணிகளும், கேரளா மற்றும் ஆந்திரா செல்லும் பயணிகளும் கோவை விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், வியாழனன்று சிங்கப்பூ ரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ விமான பயணிகளின் பாஸ்போர்ட்டை இமிகிரேசன் அதிகாரி கள் சோதனை செய்தனர். அப்போது ஆந்திரா மாநிலத் தைச் சேர்ந்த கண்டசாலா கனக துர்கா (36) என்பவரது பாஸ் போர்ட்டை சோதனையிட்ட போது, வேறு ஒருவரின் முகவரி விபரங்களில் இவரது புகைப்படத்தை ஒட்டி, போலி பாஸ் போர்ட் மூலம் கோவை வந்தது தெரியவந்தது. இதை யடுத்து அதிகாரிகள், பீளமேடு காவல் துறையினருக்கு தக வல் அளித்தனர். அங்கு வந்த காவல் துறையினர் கனக துர் காவை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட கனக துர்கா ஆந்திராவை சேர்ந்த நாகேஷ்வர ராவ் என்பவர் உதவி யுடன் போலி பாஸ்போர்ட்டை தயாரித்து அதன் மூலம் சிங்கப் பூர் சென்று அங்கு வீட்டு வேலை பார்த்து வந்ததும், தற்போது கோவைக்கு வந்து, பின்னர் விமானம் மூலம் சென்னை சென்று அங்கிருந்து ஆந்திராவிற்குச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கனக துர்கா மீது 6 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான நாகேஷ்வரராவ்வையும் தேடி வருகின்ற னர்.
பாஜகவினர் மீது வழக்கு
சேலம், டிச. 5- அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூ றாக ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்ட பாரதிய ஜனதா கட்சி யின் மாநகர் மாவட்ட தலை வர் சுரேஷ்பாபு உட்பட 156 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்த போதும் பொது மக்களுக்கு இடையூறாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அமைப்பினர் சாலையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டதை தொடர்ந்து சேலம் மாநகர காவல் துறையினர் பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படுத்துதல், அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.