கோவை, டிச.17- வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்ட கோவை குற்றாலம் சனியன்று திறக்கப்பட்டது. இதனையறிந்த சுற் றுலா பயணிகள் அருவியில் குளிக்க படையெடுத்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். கோவையின் பிரதான சுற்றுலா தலமான இந்த பகுதிக்கு உள்ளூர் மக்களும், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து செல்கின்ற னர். இதனிடையே மாண்டஸ் புயலின் தாக்கத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது. கோவை மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால் கோவை குற்றாலத்திற்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, கோவை குற்றாலம் கடந்த டிச.14 ஆம் தேதியன்று மூடப்பட்டது. தொடர்ந்து பெய்து வந்த மழையினால் கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு அருவிக்கு செல்ல அனு மதி அளிக்கவில்லை. இதனால், பலர் சாடிவயல் பகுதியில் உள்ள நீரோடையில் குளித்து சென்றனர். இதனிடையே தண்ணீர் வருவது குறைந்ததால் கோவை குற்றாலம் சனியன்று மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை யினர் அறிவித்தனர். இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க படையெடுத்து வரு கின்றனர். அதேசமயம் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காலை 10 மணி முதல் 11 மணி வரையும், 11.30 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை என்ற கால அட்டவணையின் அடிப்படையில் சுற் றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வரு கின்றனர்.