உதகை, மார்ச் 27- கனமழையினால் சேததமடைந்த சாலையை சீரமைக்கும் பணிகள் முடிவ டைந்ததைத் தொடர்ந்து, ஓராண்டுக்கு பின் னர் உதகையில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை ஞாயிறன்று திறக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 2020 ஆம் ஆண்டு பெய்த கனமழையின் போது தொட்ட பெட்டா சிகரம் செல்லும் சாலையில் அதிக ளவு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலைகள் சேதமடைந்தது. இதனால், சுற் றுலா பயணிகள் தொட்டபெட்டா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக வனத்துறை அமைச்ச ரின் அறிவுரையின்படி ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி மேற் கொள்ளும் பொழுது கல்வெர்ட் பாதுகாப் பாக தடுப்புச்சுவரும் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தடுப்புசுவருடன் கூடிய சிறுபாலம் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட் டிற்காக ஞாயிறன்று திறக்கப்பட்டது. இதை யடுத்து தொட்டபெட்டா காட்சிமுனைக்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர். இத னால், அப்பகுதி உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.