districts

பெரியார் பல்கலை., பேராசிரியர்களிடம் விசாரணை

சேலம், ஜன.5- பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப் பட்ட நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் 5 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சேலம் மாவட்டம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருப்பவர் ஜெகநாதன் (66). பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் (60), கணினி துறை இணை பேராசிரியர் சதீஷ் குமார் (45), திருச்சி பாரதிதாசன் பல் கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் (54) ஆகியோர் இணைந்து அரசு அனு மதியின்றி பூட்டர் அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனம், அப்டெக் கான் போரம் என்ற பெயரில் மற்றொரு அமைப்பையும் தொடங்கியதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய கருப்பூர் போலீசார் 4 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ஜெகநாதனை கடந்த டிச.26 ஆம் தேதியன்று கைது செய்தனர். இதன்பின் ஒரு வாரம் சூர மங்கலம் உதவி ஆணையர் அலுவல கத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற  நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட் டார். மேலும் மற்ற 3 பேரும் தலைமறை வாக உள்ளனர். இதற்கிடையே பெரி யார் பல்கலைக்கழக வளாகத்திற்குள்  உள்ள துணைவேந்தர் அலுவலகம், அவ ரது வீடு, பயணியர் மாளிகை, பதிவாளர் அலுவலகம் உள்பட 7 இடங்களில் 22 மணி நேரம் சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், துணைவேந்தருடன் நெருங் கிய தொடர்பில் இருந்த 7 பேரிடம் விசா ரணை நடத்த போலீசார் முடிவு செய்த னர். அதன்படி பெரியார் பல்கலைக்கழக பொருளாதாரத்துறை தலைவர் பேராசி ரியர் ஜெயராமன், மேலாண்மை கல்வி  நிறுவன பேராசிரியர் சுப்பிரமணிய பாரதி, விலங்கியல் துறை உதவி பேராசிரியர் நரேஷ் குமார், உளவியல் துறை உதவி  பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் விருந் தினர் மாளிகை ஊழியர் நந்தீஸ்வரன் ஆகிய 5 பேருக்கு போலீசார் சம்மன்  அனுப்பினர். இதையடுத்து 5 பேரும் வியாழனன்று கருப்பூர் காவல் நிலை யத்தில் ஆஜராகினர். அவர்களிடம் போலீ சார் விசாரணை மேற்கொண்டனர்.