ஈரோடு, மே 15- தந்தை பெரியார் இந்தியாவில் சோசலிச ஆட்சியை நிறுவ வேண்டும் என்றார் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பால பாரதி குறிப்பிட்டார். 137 ஆவது மே தின பேரணி, பொதுக் கூட்டம் சிவகிரியில் ஞாயிறன்று நடைபெற் றது. மொடக்குறிச்சி - கொடுமுடி தாலுகா குழு உறுப்பினர் எம்.சசி தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி பேசுகையில், 18 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதி யில், 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளில் தொழில் சிறிது சிறதாக வளர்ச்சி பெற்று வந் தது. அன்று பெண்கள், குழந்தைகள், தொழி லாளிகள் 20 மணி நேரம் உழைக்க வேண்டிய நிலைமை சட்டமாக இருந்தது. தொழிலா ளர்கள் அடிமைகளாகத்தான் இருந்தனர். அவர்களை கொலை செய்தாலும் தவ றில்லை என்பது நியதியாக இருந்தது. அதை உடைத்தெரியும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு தொடர்ச்சியாக போராடி வந்தனர். அதன் ஒருபகுதிதான் அமெரிக்காவில், சிகாகோ வில் நடைபெற்றது. இதற்கு மேல் இந்த பிரச்சனையை தள் ளிப்போட முடியாது என்ற முதலாளித்துவம் 8 மணி நேர வேலையை சட்டமாக்கியது. உல கின் பல்வேறு நாடுகளிலும் தொழிலாளர் களின் போராட்டத்தை தடுக்க வேண்டும் என் றால் 8 மணி நேர வேலையை சட்டமாக்கினால் தான் அரசாங்கம் இருக்கும் என்று நிலைமை உருவாக்கினார்கள். தொழிலாளர்களின் இந்த வெற்றி அத்துடன் நிற்கவில்லை. சோவி யத் ரஷ்யாவில் புரட்சியாக வெடித்தது. ஜார் மன்னன் வீழ்த்தப்பட்டான். பாரதியார் உள் ளிட்ட இந்திய நாட்டின் பல கவிஞர்கள் அதன் பால் வெகுவாக ஈர்க்கப்பட்டனர்.
கடையின் உரிமையாளர் தான் விற்கும் பொருளுக்கு விலையைத் தீர்மானிக்கிறார். அதுபோல் தன் உழைப்பை விற்கும் தொழி லாளி அதற்கான விலையைத் தீர்மானிக்க முடியவில்லை. இந்த முரண்பாட்டைத்தான் மார்க்சும், ஏங்கல்சும் விளக்கினர். இந்த முர ணைத் தீர்ப்பதற்குத் தான் ரஷ்யாவில் புரட்சி நடந்தது. இது உலகில் நடைபெற்ற மிகப் பெரிய அதிசயம். அந்த அதிசயத்தை 1932 ஆம் ஆண்டில் நேரில் சென்று பார்த்தார் தந்தை பெரியார். மற்ற நாடுகளில் 2, 3 நாட்கள் மட் டுமே தங்கிய பெரியார், சோவியத் ரஷ்யா வில் 60 நாட்கள் தங்கினார். அங்கிருந்து திரும் பிய பிறகு பெயரை சொல்லி அழைத்து வந்த வர், தோழரே என்று அழைத்தார். சுயமரி யாதை அமைப்பை சமதர்ம, சமத்துவ சுயமரி யாதை கட்சி என்று மாற்றினார். குடியரசு ஏட் டில் சோவியத் ரஷ்யாவைப் போல இங்கி ருக்கும் அரசாங்கத்தை தூக்கி எரிந்து விட்டு ஒரு சோசலிச ஆட்சியை நிறுவ வேண்டும் என்று எழுதினார். அவரைப்போல அண்ணா வும் மே தினத்தை கொண்டாடுவோம், என் றார். கலைஞர் கருணாநிதி ஒருவேளை நான் பெரியாரையும், அண்ணாவையும் பார்க்கா மல் இருந்திருந்தால் கம்யூனிஸ்டாக இருந்தி ருப்பேன் என்று சொன்னார். எம்ஜிஆர் தனது ஆட்சியின் 4 கால்களில் ஒரு கால் பட்டுக் கோட்டையாரின் கவிதை வரிகள் என்றார். மிசாவிற்குப் பிறகு சோசலிசம் என்ற வார்த் தையை அரசியல் சட்டத்தில் இணைத்தார் இந்திரா காந்தி. அந்த சோசலிசம் வார்த்தை யோடு இருக்கிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சமத்துவ சமூகத்தை நிறுவு வதற்குத் தான் தொழிலாளி வர்க்கம் மே தினத்தை உரிமை நாளாகக் கொண்டாடி வரு கிறோம்.
அந்த தொழிலாளி வர்க்கம் தான் இரண் டாம் உலகப் போரின் போது, பாசிச சக்தி களான ஹிட்லரையும், முசோலினியையும் ஓட ஓட விரட்டியது. இந்த செங்கொடிதான் ஹிட் லரை மரணத்தின் விளிம்பிற்கு தள்ளியது என்பது வரலாறு. பசு பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி, பசுவதை தடை சட்டம் கொண்டு வந்தது. கல்வி நிறுவனங்களுக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது, இந்து கோவில்களுக்கு முன்பு இஸ்லாமியர்கள் கடை வைக்கக்கூடாது, அதை வாங்கக் கூடாது என்றது பாஜகவும், அதன் அரசும். இத்தகைய அநீதி இழைத்தும், ஊழல் செய்தும், மக்கள் ஒற்றுமையைப் பிளந் தவர்களுக்கு எதிராக இந்துக்களும், முஸ் லிம்களும், கிறித்தவர்களும் கர்நாடகத்தில் வாக்களித்துள்ளனர். தொழிலாளி வர்க்கத் தின் ஒற்றுமை உறுதிபட்டு மாற்றுக் கொள்கை யோடு, மாற்று செயல் திட்டங்களோடு செங் கொடி இயக்கம் சமூகத்தை மாற்றும், என்று பேசினார். முன்னதாக, தீரன் சின்னமலை சிலைக்கு காசிபாளையம் பேரூராட்சி முன்னாள் தலை வர் கே. துரைராஜ் அணிவித்து பேரணியைத் தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழி யாக சென்ற பேரணி அண்ணா கலையரங் கில் நிறைவடைந்தது. அங்கு குமரன் சிலைக்கு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் மாலை அணிவித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் வரவேற்றார். மாவட் டக்குழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி மற் றும் தாலுகா செயலாளர் கே.பி. கனகவேல் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இந்நிகழ்ச்சியில் காம்ரேட் டாக்கீஸ் குழு வினரின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. நிறைவாக தாலுகா குழு உறுப்பினர் டி.தங்க வேல் நன்றி கூறினார்.