districts

img

பெரியார் பிறந்த நாள்

திருப்பூர், அக்.6 - தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக ஞாயிறன்று திராவிடர் விடுதலை கழகம் சார்பாக வீரபாண்டி பிரிவு பகுதியில் தொடங்கி குளத் துப்பாளையம், ராயபுரம், பெரியார் காலனி,15 வேலம்பாளை யம், அம்மாபாளையம், ஆத்துப்பாளையம் அனுப்பர்பாளை யம், மாஸ்கோ நகர் ஆகிய பகுதிகளில் கொடியேற்றி இனிப்பு,  வழங்கி கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்விற்கு பொருளாளர் சு.துரைசாமி தலைமை  தாங்கினார். திராவிட விடுதலைக் கழகத்தின் மாவட்டத் தலை வர் முகில் ராசு முன்னிலை வகித்தார். நிகழ்வில் ஊடகவியலா ளர் பரிமள ராசன், மாவட்டச் செயலாளர் நீதி ராசு, மாவட்ட  அமைப்பாளர் சங்கீதா, உள்பட பெருந்திரளானோர் கலந்து  கொண்டார்கள்.