திருப்பூர், பிப்.11 - தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வாழ் வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூரில் அரசு ஊழியர் சங் கத்தினர் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தி னர். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற் றுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் தங்கள் கோரிக் கைகளை விரைந்து நிறைவேற்ற வலி யுறுத்தியும், கோரிக்கைகளை வென்றெ டுக்கும் வகையில் இயக்க ரீதியிலான ஒன் றுபட்ட போராட்டத்தை முன்னெடுப்பது என்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை முடிவின்படி அரசு ஊழியர்கள் ஒருங்கி னைத்து இந்த இயக்கம் நடத்தப்பட்டது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பயனளிப்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்து ணவு அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர்க ளுக்கு, எம்ஆர்பி செவிலியர்களுக்கு கால முறை ஊதியம் சட்டபூர்வ ஓய்வூதி யம் வழங்க வேண்டும். சாலைப்பணியா ளர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலி யாக உள்ள ஆறு லட்சம் பணியிடங்களில் வேலையில்லா இளைஞர்களுக்கு கால முறை ஊதியத்தில் பணி வழங்கி நிரப்பிட வேண்டும். அரசுத் துறையில் அவுட்சோர் சிங், ஒப்பந்த நடைமுறை மற்றும் ஆட் குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அரசுத் துறைகளில் தனியார் மயமாக்கல், கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் ஆளெடுக்கும் வகையில் போடப் பட்ட 152, 115, 139 அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த வாழ்வாதாரக் கோரிக்கை பேரணி திருப் பூர், தென்னம்பாளையம் உழவர் சந்தை முன்பிருந்து வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. அரசு ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் ஏ.ராணி தலைமை வகித்தார். ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப் பாளர் க.ராஜேந்திரன் இப்பேரணியைத் தொடக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் மா.பால சுப்பிரமணியன் உரையாற்றினார். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கள் ஆ.செல்வம், சோ.சந்திரசேகரன், தங் கபாண்டியன், அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சி.பரமேஸ்வரி ஆகி யோர் உரையாற்றினர்.மாவட்டப் பொரு ளாளர் செ.முருகசாமி நன்றி கூறினார்.