districts

img

நகை விற்பனை சதவிகிதம் அதிகரிப்பு - வியாபாரிகள் தகவல்

சேலம், ஜன.23- திருமண நாட்கள் அடுத்த டுத்து வருவதால் கடந்த சில  நாட்களாக, வழக்கத்தை விட  தங்கநகை விற்பனை 30 சதவிகி தம் அதிகரித்துள்ளது என நகை  வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். உலகளவில் தென் ஆப்பி ரிக்கா, சீனா, உருசியா, ஐக்கிய  அமெரிக்கா, பெரு, ஆஸ்திரே லியா, கனடா, மெக்சிகோ உள்பட பல நாடுகளில் தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நாடு களில் இருந்து உலகம் முழுவதும் தங்கம் இறக்குமதி செய்யப்படு கிறது. உலகளவில் சீனா, அமெ ரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா உட் பட பல்வேறு நாடுகளில் டன் கணக் கில் தங்கம் இருப்பில் உள்ளது.  இந்தியாவில் கடந்த 2006 ஆம்  ஆண்டு வரை தங்கம் விலை அவ் வப்போது கணிசமாக உயர்ந்தது. அப்போது 8 கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்திற்கு விற்றது. 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு தங்கம் விலை  உயரத் தொடங்கியது. அதுவரை தங்கம், வெள்ளி ஆகிய இரண்டும் இணையதள வர்த்தகத்தில் இல்லை. இதன்பிறகு தங்கம், வெள்ளி இணையதள வர்த்தகத்திற்குள் கொண்டு வரப்பட்டதால், தங்கத் தின் விலை படிப்படியாக உயர தொடங்கியது.

2007 ஆம் ஆண்டு  ஒரு பவுன் தங்கம் 10 ஆயிரம் வரை உயர்ந்தது. பின்பு 2010ம் ஆண்டு மீண்டும் தங்கம் விலை மேலும் உயர ஆரம்பித்தது. அந்தாண்டு ஒரு பவுன் தங்கம் ரூ.15 ஆயி ரத்தை தாண்டியது. 2011ம் ஆண்டு  ரூ.22 ஆயிரம் உயர்ந்தது. அதன் பிறகு, அவ்வப்போது கணிசமாக விலை ஏறியது.  2019 ஆம் ஆண்டு செப்டம் பரில் ரூ.30 ஆயிரம் எனவும், 2020 ஆம் ஆண்டு ஜூலையில் உச்சக் கட்டமாக ரூ.44 ஆயிரம் வரை விலை அதிகரித்தது. இந்த காலக் கட்டத்தில் மேலும் விலை உய ரும் என்ற அச்சத்தில் பலர் தங்கத் தில் முதலீடு செய்தனர். இதன் காரணமாக தங்க நகைக்கடை களில் விற்பனை அதிகரித்தது. மேலும், தங்க நகையை வாங்கு வதைவிட, தங்க நாணயம் அதி களவில் வாங்கி குவித்தனர். இத னால் பல நகைக்கடைகளில் தங்க  நாணயத்திற்கு தட்டுப்பாடு ஏற் பட்டது. இந்நிலையில், கடந்த பொங் கல் பண்டிகையில் நகைகளின் விற்பனையில் முன்னேற்றம் இருந் தது. நடப்பு தை மற்றும் மாசி மாதங்களில் ஏராளமான திருமண நாட்கள் வருவதால் நகைகளின் விற்பனை சற்று அதிகரித்துள்ள தாக வியாபாரிகள் தெரிவித்த னர்.

இதுகுறித்து தங்க நகைக் கடை உரிமையாளர்கள் கூறுகை யில், தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய நகைக்கடைகள் உள்ளன.  வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும்  ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி  உள்ளிட்ட மாதங்களில் திருமண நாட்கள் இருந்தாலும் பெரும் பாலனோர் இந்த மாதங்களில் திருமணம் நடத்துவதை தவிர்த்து விடுவார்கள். இம்மாதங்களில் நகை விற்பனையும் குறையும். அதேநேரத்தில் மற்ற மாதங்களில் விற்பனை சற்று அதிகரிக்கும். இந்த மாதங்களில் திருமணம் நிச்சயம் செய்த பெரும்பலானோர் தங்கம் வாங்க வருவார்கள். அந்த வகையில் நடப்பு தை மற்றும் மாசி மாதங்களில் பத்து திருமண நாட் கள் வருகிறது. இந்த நாட்களில் தமிழகம் முழுவதும் ஏராளமான திருமணம் செய்ய ஏற்பாடு நடந் துள்ளது. இதற்காக தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளது.  இந்நிலையில், சமீப காலமாக தங்கத்தின் விலை அடிக்கடி ஏறி யும், இறங்கியும் வருகிறது. தங்கம் விலை ஏறினாலும், தேவைக்காக தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை  சற்று அதிகரித்துள்ளது. திருமண நாட்கள் அடுத்தடுத்து வருவதால் கடந்த சில நாட்களாக, வழக் கத்தை விட விற்பனை 30 சதவிகி தம் அதிகரித்துள்ளது, என்றனர்.