districts

img

பொங்கல் பண்டிகை: அங்காடிகளில் குவியும் மக்கள்

நாமக்கல், ஜன.12- பொங்கல் பண்டிகையை முன் னிட்டு, காய்கறி அங்காடி பகுதிக ளில் பொதுமக்களின் கூட்டம் அதிக ரித்து காணப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய பண்டி கைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை செவ்வாயன்று (நாளை)  கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டி யுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் நிறைவு பெற்று, தொடர் விடுமுறை விடப் பட்டுள்ளது. கல்வி பயிலும் மாணவ, மாணவியர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ள  நிலையில், நாமக்கல்லில் ஜவுளி சந்தை பகுதியில், ஜவுளி கடைக ளில் பொங்கல் பண்டிகையை ஒட்டி  புத்தாடைகளை வாங்க பொது மக்கள் கூட்டம் அதிகரித்த வண் ணம் உள்ளது. மேலும், பொங்கல்  பண்டிகையின் விசேச விற்பனை  பொருட்களான மஞ்சள், கரும்பு, பொங்கல் பானை, தேங்காய், வாழைத்த்தார் உள்ளிட்ட விவ சாயப் பொருட்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. நாமக்கல் உழ வர் சந்தை, நாமக்கல் - சேலம்  சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சிறப்பு சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு, விற் பனை தீவிரமாக நடைபெற்று வரு கிறது. கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு பொங்கல் பொருட்க ளின் விலை கணிசமான அளவில்  அதிகரித்துள்ளதாக பொதுமக்கள்  தெரிவித்துள்ளனர். தற்போது  பொங்கல் பானை ஒன்று ரூ.150 முதல் விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. பொங்கல் கரும்புகள் ஜோடி  ரூ.80 முதல் ரூ.100 வரையும் விற் பனை செய்யப்படுகிறது.