districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

போலீசார் மீது பட்டாசுகளை வீசிய நபர்கள்

கோவை, ஜன.11- கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திரையரங்கில்  அஜித் ரசிகர்கள் அத்துமீறி திரையரங்கிற்குள் நுழைய  முயன்றதால், போலீசார் தடியடி நடத்தி கலைத்தபோது,  சிலர் பட்டாசுகளை போலீசார் மீது வீசியதால் பரபரப்பு  ஏற்பட்டது. திரைக்கலைஞர் அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய்  நடித்த வாரிசு ஆகிய திரைப்படங்கள் புதனன்று உலகம்  முழுவதும் வெளியானது. இதில், நள்ளிரவு ஒரு மணிய ளவில் துணிவு படம் வெளியானது. இதனை கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் கோவையில் உள்ள அர்ச்சனா  திரையரங்கம் முன்பு கூடி ஆரவாரம் செய்து கொண்டி ருந்தனர். அப்போது திடீரென ரசிகர்கள் சிலர் திரையரங் கிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாது காப்பு பணியிலிருந்த போலீசார் தகராறில் ஈடுபட்ட ரசிகர்கள்  மீது தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது ரசிகர்கள் சிலர்  போலீசார் மீது பட்டாசுகளை கொளுத்தி வீசியதால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திரையரங்கு வளாகத் திற்குள் இருந்த ரசிகர்கள் முற்றிலுமாக வளாகத்தை விட்டு  வெளியேற்றப்பட்டனர். 

வாலிபர்கள் படுகாயம்

சேலம் மாவட்டத்தில் பல திரையரங்குகளில் துணிவு திரைப்படத்தின் சிறப்புக் காட்சி புதனன்று நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியிடப்பட்டது. சேலம் புதிய பேருந்து நிலையம்  அருகே உள்ள திரையரங்கு முன்பு ரசிகர்கள் கூடி பட்டாசு களை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனி டையே நேரமாகியும் திரையரங்கின் கதவு திறக்கப்படாத தால், அஜித் ரசிகர்கள் கதவின் மீது ஏறி திரையரங்குக்குள் நுழைந்தனர். மேலும், திரையரங்கின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். அப்போது வாலிபர் ஒருவரின்  காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே கூட்ட நெரிசல் சிக்கிய அஜித் ரசிகர் ஒருவரின் வலது கால்  முறிந்தது. வழியில் துடித்த அந்த நபரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:48.80/60அடி 
நீர்வரத்து:833கன அடி
வெளியேற்றம்:1022கன அடி
அமராவதி அணை 
நீர்மட்டம்: 85.90/90அடி.
நீர்வரத்து:180கனஅடி
வெளியேற்றம்:445கன அடி

விஷ மாத்திரை கொடுத்து 4 பேர் கொலை  குற்றவாளிக்கு  35 ஆண்டு சிறை

ஈரோடு, ஜன. 11- கொரோனா மாத்திரை என கூறி  விஷ மாத்திரை கொடுத்து 4 பேரை  கொலை செய்த வழக்கில் தொடர்புடை யவருக்கு 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.  ஈரோடு மாவட்டம், சென்னிமலை  அருகே உள்ள பெருமாள்மலை அடி வாரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப் பண்ணன்(55). இவரது மனைவி  மல்லிகா (50), மகள் தீபா (30). இதனி டையே கல்யாணசுந்தரம் (44) என்்பவர் விவசாய பணிகளுக்காக தனது நண்ப ரான கருப்பண்ணணிடம் அவ்வப் போது கடனாக பணம் பெற்று வந்தார். இவ்வாறு கடனாகப் பெற்ற தொகை ரூ.14 லட்சமானது. இத்தொகையை கருப்பண்ணன் திரும்ப கேட்டபோது இருவருக்குமிடையே பிரச்சனை உரு வானது. இதனால் கல்யாணசுந்தரம், கருப் பண்ணனை கொலை செய்ய திட்ட மிட்டுள்ளார். இதற்காக சென்னிமலை  அருகே உள்ள சரவணம்பட்டியைச்  சேர்ந்த போத்தீஸ்குமார் என்ற சபரி (22)  என்பவரிடம், அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி, கருப்பண் ணனிடம் கொரோனா மாத்திரை  எனக்கூறி விஷ மாத்திரையை கல்யாண சுந்தரம் கொடுக்கச் சொல்லியுள்ளார்.  இதையடுத்து 26-6-2021 அன்று கல் யாணசுந்தரம் போத்தீஸ்குமாருடன் கருப்பண்ணன் வீட்டுக்கு சென்றார்.  மேலும், தீபா பிரசவத்திற்காக பெற் றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தீபா, கருப்பண்ணன், மல்லிகா,  தோட்ட வேலை செய்து கொண்டி ருந்த குப்பம்மாள் ஆகியோரிடம் கொரோனா மாத்திரை என விஷ மாத்தி ரைகளை போத்தீஸ்குமார் கொடுத் துள்ளார். இதை நம்பிய 4 பேரும்  விஷ மாத்திரையை சாப்பிட்டனர். சிறிது  நேரத்தில் தீபாவுக்கு உடலில் ஏதோ  மாற்றம் தெரியவர, அவர் தனது கணவர்  பிரபுவுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், பிரபு வருவதற்குள் 4 பேரும்  மயக்கமடைந்தனர். இதன்பின் அவர் களை மீட்டு மருத்துவமனையில்  சேர்த்தும், சிகிச்சை பலனின்றி 4  பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், தீபாவின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் காவல்துறை யினர் கொலை வழக்குப்பதிவு செய்து, கல்யாணசுந்தரம், போத்தீஸ்குமார் என்ற சபரி ஆகியோரை கைது செய் தனர்.  இவ்வழக்கு விசாரணை ஈரோடு  மகளிர் நீதிமன்றத்தில் ஆர்.மாலதி  முன்னிலையில் நடந்தது. விசாரணை  முடிந்த நிலையில் திங்களன்று தீர்ப்பு  அளிக்கப்பட்டது.  அதில் முதல் குற்ற வாளியான கல்யாணசுந்தரத்துக்கு 35   ஆண்டுகள், 6 மாதம் சிறை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 2 ஆவது குற்றவாளியான போத்தீஸ் குமார் என்கிற சபரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அப ராதம் விதிக்கப்பட்டது.

ஆடுகள் விற்பனை

தருமபுரி, ஜன.11- தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் ஒவ் வொரு வாரமும் செவ்வா யன்று சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வாரச் சந்தைக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங் கவும், விற்கவும் பிரசித்தி பெற்றதாகும்.  சந்தையில் ஆடுகள் எடைக்கேற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை  விற்பனையானது. செவ்வா யன்று சுமார் ரூ.1 கோடி  வரை ஆடுகள் விற்பனை யானது. கொரோனா ஊர டங்கு காலத்துக்கு பிறகு ஆடுகள் விற்பனை சந்தை யில் களை கட்டியது. அதி காலையில் கடும் பனிப் பொழிவிலும் விறுவிறுப் பான விற்பனை நடை பெற்றது.

கஞ்சா விற்பனை: ஒருவர் கைது

தாராபுரம், ஜன.11- தாராபுரம் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட  ஒருவரை காவல் துறையின;h கைது செய்தனர். தாராபுரம் சந்தப்பேட்டை டாஸ்மாக் கடை அருகே சில நபர் கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக குற்ற பிரிவு போலீ சாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகு தியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்ப னையில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை  நடத்தினர். விசாரணையில் தாராபுரம் சங்கர் ரைஸ்மில் பின்பு றம் வசித்து வரும் பாலன் என்பவரது மகன் தமிழ்ச்செல் வன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தமிழ்ச்செல் வன்னை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து விற்ப னைக்காக வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய் தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி யதில் தேனி, கேரளா, உள்ளிட்ட பகுதியில் இருந்து கஞ்சா  விற்பனைக்கு கொண்டு வருவார்கள் அதை விலை கொடுத்து  வாங்கி 25 கிராம் 50 கிராம் 100 கிராம் பொட்டலங்களாக மடித்து  விற்பனை செய்து வந்ததாகவும் தெரிவித்தார். இதை அடுத்து  கஞ்சாவை  மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வரும் நபர் கள் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்து வைத்துள் ளனர். அவ்வாறு விற்பனைக்கு கொண்டு வரும் நபர்களை கூண்டோடு பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதை அடுத்து தமிழ்ச்செல்வன்  மீது வழக்கு பதிவு செய்து  போலீ சார் அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்திசிறையில் அடைத் தனர்.

எம்பி நிதி ரூ. 3.75 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம்

திருப்பூர், ஜன. 11 - திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் கே.சுப்பராயன் தொகுதி வளர்ச்சி நிதியி லிருந்து ரூபாய் மூன்று லட்சத்து 75 ஆயிரம்  மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் ஐந்து பேருக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப் பட்ட ஸ்கூட்டர் வாகனங்கள் வழங்கப்பட் டன. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினித்  முன்னிலையில், கே.சுப்பராயன் எம்.பி., ஐந்து பயனாளிகளுக்கு வாகனத்தை ஒப்ப டைத்தார்.கணக்கம்பாளையம் விக்னேஸ் வரா நகர் விரிவு வரதராஜ், பூலுவபட்டி  நஞ்சப்பா நகர் கோமதி, கேத்தம்பாளையம் குமாரசாமி நகர் குமார், பட்டுக்கோட்டையார் நகர் பைசர் அகமது, போயம்பாளையம் குருவாயூரப்பன் நகர் செல்வராஜ் ஆகிய ஐந்து பேருக்கு இந்த  வாகனங்கள் வழங் கப்பட்டன.

அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:48.80/60அடி 
நீர்வரத்து:833கன அடி
வெளியேற்றம்:1022கன அடி
அமராவதி அணை 
நீர்மட்டம்: 85.90/90அடி.
நீர்வரத்து:180கனஅடி
வெளியேற்றம்:445கன அடி

கடன் தொல்லை: ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் தற்கொலை

திருப்பூர், ஜன. 11 - திருப்பூரில் கடன் தொல்லை காரணமாக அரசு கலைக் கல் லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகூர்கனி (40). இவர்  திருப்பூர் காலேஜ் ரோடு பாறைகுழி பகுதியில் தங்கியிருந்து  தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் அக்கம் பக்கத் தில் செலவுக்காக கடன் வாங்கி அந்த கடனை உரிய நேரத் தில் திருப்பி கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் திருப் பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தின் பின்பு றத்தில் உள்ள ஒரு மரத்தில் நாகூர்கனி தூக்கில் தொங்கிய  நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறைந்த திருமகன் ஈவெரா பெயரில் சாலை

ஈரோடு, ஜன. 11- ஈரோடு மாநகராட்சியின் அவசர கூட்டம் செவ்வா யன்று மாலை நடைபெற்றது. மேயர் சு.நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் வி.செல்வராஜ், ஆணை யர் க.சிவகுமார் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தின் தொடக்கத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் திருமகன் ஈவெரா மறைவுக்கு அஞ் சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரோடு கச்சேரி வீதிக்கு திருமகன் ஈவெரா சாலை என்று பெயர் சூட்டு வது என்பன உள்ளிட்ட 22 தீா்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

இலவச வேட்டி, சேலை இல்லையா? சிபிஎம் கேள்வி

திருப்பூர், ஜன.11- திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 1, 9, 10, 15 ஆகிய வார்டுகளில் இன்னும் 8,469 நியாய விலை கடை அட்டைதாரர்களுக்கு, வேட்டி சேலை வழங்கப்படமல் உள்ளது என மார்க் சிஸ்ட் கட்சி புகார் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் திருப்பூர் வடக்கு ஒன்றிய கிளை சார்பில் வட்டாட்சியர் அலுவ லகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியி ருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சிக்குட் பட்ட 1, 9, 10, 15 ஆகிய வார்டுகளில் உள்ள 11 நியாய விலை கடைகளில் மொத்தம் 11,286 கார்டுகள் உள்ளது. ஜன.9 ஆம் தேதி மட்டும் 2,817 கார்டுகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக மீதமுள்ள 8,469 காடுகளுக்கு வேட்டி, சேலை வழங்கப்படவில்லை. கடைகளில் கேட்டால் இன்னும் வேட்டி, சேலை வரவில்லை என்கின் றனர். பொங்கலுக்கு இரண்டு நாட்களே  உள்ள நிலையில் வேட்டி, சேலை கிடைக் குமா? என்று மக்கள் கவலையடைந்துள்ள னர். எனவே, இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு அனைவருக்கும் பொங்கலுக் குள் வேட்டி, சேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொள்ளையர்களுக்கு சிறை தண்டனை

உதகை, ஜன.11- நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சி, மைசூர் மரப்பாலம்  அருகே உள்ள மங்குழி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்ப வரின் வீட்டின் பூட்டை உடைத்து கடந்தாண்டு அக்.7 ஆம் தேதி யன்று 27 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கூடலூர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி, கர்நாடகா மாநிலம், மைசூரு  பகுதியைச் சேர்ந்த மது (23), கேரளம் மாநிலம், மாநந்தவாடி  பகுதியைச் சோ்ந்த மனு (20), அவரின் தாயார் லதா (38) ஆகி யோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கூட லூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேற்கண்ட 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் காயம்

சேலம், ஜன.11- காடையாம்பட்டி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளா னது. இதில், கார்களில் இருந்த 4 பேர் காயமடைந் தனர். சேலம் மாவட்டம், காடை யாம்பட்டி அருகே உள்ள எலத்தூர் என்ற பகுதியில் வசிக்கும் முரளி என்பவரு டைய சொகுசு காரில் அவ ரது உறவினர் தேசிய நெடுஞ் சாலையை கடக்க முயன் றுள்ளார். அப்போது சேலத் திலிருந்து பெங்களூரு நோக்கி குழந்தை உட்பட 4 பேர் பயணித்த சொகுசு கார் மீது எதிர்பாராத விதமாக பலமாக மோதியது. இதில் சேலத்திலிருந்து பெங்க ளூரு நோக்கி சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது. இதைய டுத்து, பொதுமக்கள் அந்த காரை  தண்ணீர் கொண்டு அணைக்க முயன்றனர். ஆனால், தீயை அணைக்க முடியாததால் காடையாம் பட்டி தீயணைப்பு துறையின ருக்கு தகவல் தெரிவித்த னர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை முழுவதும் அணைத்தனர். இதில் குழந்தை உள்பட நான்கு பேர் பயணம் செய்த நிலையில், அனைவரும் லேசான காயத்துடன்  உயிர் தப்பினர். மேலும், காயமடைந்த வர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இந்த விபத்தில் சேலம் –  பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இவ்விபத்து குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.