உதகை, மே 5- பந்தலூர் அருகே பழங் குடியினர் குடியிருப்பு பகுதி யிலிருந்த பாலம் உடைந் ததால் அப்பகுதி பொது மக்கள் அவதிக்குள்ளா கினர். நீலகிரி மாவட்டம், பந்த லூர் தாலுகா, கூவமூலா அருகே உள்ள செட்டிவயல் பழங்குடியினர் காலனியில் நூற்றுகணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அவசர தேவை, அத்தி யாவசிய பொருட்கள் வாங்க கூவமூலா அல்லது உப்பட்டி, பந்தலூர் பஜாருக்கு தான் வர வேண்டும். இந்நிலையில, செட்டிவயல் காலனியி லிருந்து கூவமூலாவிற்கு செல்லும் சாலை யின் குறுக்கே நீரோடை செல்கின்றது. இந்த நீரோடையை கடக்க நெல்லியாளம் நக ராட்சி சார்பில் சிறிய பாலம் அமைக்கப் பட்டது. இந்த சிறிய பாலம் மிகவும் பழுத டைந்து காணப்பட்டது. இதனால் இந்த பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில், செட்டிவயல் காலனி - கூவமூலா இடையேயான சிறிய பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக் கப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அதி காரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.