உதகை, மே 27- காந்தல் பகுதிக்கு இயக்கப் படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், ஆசேம டைந்த அப்பகுதி பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை கோட்டத்திற்கு உட் பட்ட நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி-1, ஊட்டி-2, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், மேட்டுப்பாளையம்-1 ஆகிய அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் செயல்பட்டு வரு கின்றன. இதில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், தமி ழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற் றும் நீலகிரி மாவட்டத்திற்குள் என 270 வழித்தடங்களில் 335 பேருந்து கள் இயக்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில், நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை அரசு பேருந்துகளை பயன்படுத்து கின்றனர். இதற்கிடையே மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியதால், சுற் றுலா தலங்களுக்கு செல்வதற்காக 30க்கும் மேற்பட்ட சர்க்யூட் எனப் படும் சுற்று பேருந்துகள் இயக்கப் பட்டது. இதனால், நீலகிரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு இயக் கப்பட்ட பேருந்துகளின் எண் ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. காந்தல் பகுதியில் 6 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலை யில், தற்போது 2 மட்டுமே இயக்கப் படுகிறது. இதனால், அப்பகுதி மக் கள் பெரும் அவதிக்குள்ளாகி யுள்ளனர். இந்நிலையில், காந்தல் பெனட் பகுதியில் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து, ஊட்டி மேற்கு காவல் துறை ஆய்வாளர் தலைமை யிலான போலீசார் மற்றும் போக்கு வரத்து கழக கிளை மேலாளர் சம் பவ இடத்திற்கு சென்று பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம ரசப்படுத்தினர். அடுத்த ஒரு வாரத் தில் பள்ளி, கல்லூரிகள் தொடங்கி விடும். எனவே இதற்கு முன்பு இயக் கப்பட்டது போல காந்தல் பகுதிக்கு ஆறு பேருந்துகள் இயக்காவிட் டால் மீண்டும் போராட்டம் நடத்து வோம், என்றனர்.