திருப்பூர், ஜூன் 12- மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காவுத்தம்பாளையம் பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று சாலை மறியலில் ஈடு பட்டனர். தமிழ்நாடு மின் தொடர்பு கழகத்தி னால் விருதுநகர் முதல் காவுத்தம்பா ளையம் வரை அமைய உள்ள 65/400 கிலோ வாட் உயர் மின் கோபுர திட்டத் தின் பவர் ஸ்டேஷன் காவுத்தம்பாளை யத்தில் அமைய உள்ளது. இந்த திட்டத் தினால் சுற்றியுள்ள ஊர்கள், விவசாய நிலங்களும் பாழ்பட்டு, மக்கள் வாழத் தகுதியற்றதாக மாறிவிடும். எனவே இத் திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள், விவசா யிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று சாலை மறியலில் ஈடு பட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட துணை ஆட்சியர் பொது மக்களிடம் இப்பிரச்சனை குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் சிலர் கூறுகையில், மின் கோபுரம் அமைக்க அனுமதிக்கக் கூடாது. இந்த இடத்தில் தோண்டப் பட்ட இடங்களில் பல ஆண்டுகள் பழ மையான தொல்பொருட்கள் கிடைத் துள்ளன. அங்கே அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும், என்றனர்.