தருமபுரி, செப்.4- பாப்பாரப்பட்டி அருகே அரசு சார்பில் கட்டித்தரப்பட்ட தொகுப்பு வீடு இடிந்து விழுந்த நிலையில், வீடின்றி தவித்து வரும் நபருக்கு புதிதாக வீடு கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப் பட்டி பேரூராட்சிக்குட்பட்ட தியாகி சுப்பிரமணிய சிவா காலனியில், சுமார் 50க்கும் மேற்பட்ட குடியி ருப்புகள் உள்ளன. பட்டியிலின சமூ கத்தைச் சேர்ந்த இப்பகுதி மக்க ளுக்கு, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் தொகுப்பு வீடு கள் கட்டித்தரப்பட்டன. அதில் பெரும் பகுதி வீடுகள் தற்போது பழுத டைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருமா னத்தில் வாழ்க்கை நடத்தவே சிர மப்பட்டு வரும் இப்பகுதி மக்கள், பழுதடைந்த வீட்டை சீரமைக்க முடியவில்லை. இதனிடையே, இப்பகுதியைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழி லாளி சிவாஜி (47) என்பவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட் டிக்கொடுத்த தொகுப்பு வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந் தார். ஏற்கனவே, கூரையில் சிமெண்ட் காரை பெயர்ந்து காணப்பட்ட இவ ரின் வீடு, சமீபத்தில் பெய்த மழை யில் மேலும் பழுதடைந்தது. இந்நி லையில், புதனன்று சிவாஜி வழக் கம்போல பணிக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி மற்றும் தாயார் வீட்டுக்கு வெளியில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக வீட்டின் கூரை முழுவதும் இடிந்து விழுந்தது. இதில் வீட்டுக்குள் இருந்த உணவுப் பொருட்கள், பாத்திரங்கள், துணி மணிகள் சேதமடைந்தன. அப் போது வீட்டுக்குள் யாரும் இல்லாத தால், எந்தவிதமான உயிர்சேத மும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த பாப் பாரப்பட்டி கிராம நிர்வாக அலுவ லர் ரத்தினகிரி சம்பவ இடத்திற்கு சென்று சேதம் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்துள்ளார். இதுபோன்று 20க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடு கள் பழுதடைந்து, எப்போது இடிந்து விழும் என்ற அபாய சூழலில் அப் பகுதி மக்கள் வசித்து வருகின்றனர். எனவே, பழுதடைந்த வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடு கட்டித் தரவேண்டும் எனவும், வீடு இடிந்த சிவாஜிக்கு நிவாரணமும், புதிய அரசு வீடும் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள் ளனர்.