திருப்பூர், ஏப்.20 - பல்லடம் அருகே அனுப்பட்டியில் இயங்கிவரும் தனியார் இரும்பு உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல் லடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவல கம் அருகே அனுப்பட்டி ஊர் மக்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் வியா ழனன்று உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்டனர். பெருந்திரளான பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்போராட்டத்தில் இரும்பு உருக்கு ஆலையால் தாங்கள் அடையும் பாதிப் புக்களை மக்கள் எடுத்துக் கூறினர். அனுப்பட்டி ஊராட்சி மன்ற தலை வர், மக்களுடைய இந்த நியாயமான போராட்டம் வெல்வதற்கு இறுதிவரை துணையாக இருப்போம் என தெரிவித் தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங் கத்தின் சட்ட விழிப்புணர்வு அணி, மாநிலச் செயலாளர் சதிஷ், மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் போக்கை கண் டித்து பேசினார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, இரும்பு உருக்கு ஆலை யால் நாள்தோறும் மக்கள் அடையும் இன் னல்களை எடுத்துரைத்து, ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடும்வரை சங்கத் தின் போராட்டம் தொடரும் என்று கூறி னார். ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடும் உத்தரவு இன்று பிறப்பிக்கப்ப டாவிட்டால், அனுப்பட்டி ஊராட்சி மன் றத்தில் உள்ள அனைத்து மக்களும், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித் தனர். போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டி ருந்த மக்கள் பல்லடம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை நோக்கி முழக்கமிட்டு முன்னேறினர். காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரை யும் கைது செய்து அருகேயுள்ள தனி யார் திருமண மண்டபத்தில் வைத் தனர். அனுப்பட்டி ஊர் மக்கள் 32 நாட்க ளாக காத்திருப்பு போராட்டம் மற்றும் 9 நாட்களாக நடத்திவரும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து பல்லடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.