districts

img

தனியார் தறி நிறுவனத்தின் முன் திரண்ட மக்கள்

ஈரோடு, ஆக.19- தறி உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை கேட்டு தனியார் தறி நிறுவனத்தின் முன்பு ஏரளாமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூர் பகுதியில் தனியா ருக்கு சொந்தமான டெக்ஸ்டைல் இயங்கி வருகிறது. இந்நிறுவனத் தில் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு  மேலாக பணி புரிந்துள்ளனர். கொரோனா காலத்திற்கு பிறகு நிறுவ னத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இத னால் கடந்த சில வருடங்களாக செயல்படமால் நிறுத்தி வைக்கப்பட் டிருந்தது.  இதில் 50க்கும் மேற்பட்ட தறி உரி மையாளர்களுக்கு பல இலட்சம் ரூபாய் வழங்க வேண்டிய பணத்தை நிலுவை வைத்துள்ளனர்.  இந்நிலையில், நிலுவைத்தொ கையை தராமல் இந்நிறுவனத்திலி ருந்து இயந்திரங்களை எடுத்து செல்ல முற்பட்டனர். அப்போது, தறி உரிமையாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகையை தராமல் இயந்திரங் களை எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம், என்றனர். இதனைத் தொடர்ந்து தறி உரிமையாளர்கள் ஏராளமானோர் நிறுவனத்தின் நுழை வாயில் முன்பு  திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தகவலறிந்து வந்த காவல் துறை யினர் இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். தறி உரிமையா ளர்களுக்கு, செலுத்த வேண்டிய பாக்கி தொகையை செலுத்தி விட்டு இயந்திரங்களை எடுத்து செல்வ தாக நிர்வாகத்தினர் தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.