தாராபுரம், செப். 20 - தாராபுரம் பகுதியில் தொடர்ந்து நடைபெ றும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், குற்றப் பிரிவு போலீசார் தூங்குகிறார்களா என பொதுமக்கள் காட்டமாக கேள்வி எழுப்பு கின்றனர். தாராபுரம் காவல்நிலைய எல்லைக்குட் பட்ட பகுதிகளில் திருட்டு, கொள்ளை, வழிப் பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திங்களன்று கொண்டரசம்பாளையத்தில் வசித்து வரும் கொங்கூர் ஊராட்சி செயலர் வீட்டில் 35 பவுன் நகை மற்றும் ரூ.85 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயுள்ளது.
தொடரும் கொள்ளை சம்பவங்கள்
கடந்த 4 மாதங்களில் மட்டும் 10க்கும் மேற் பட்ட திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. கிராம ஊராட்சி செயலர் வீட் டில் 35 பவுன், கீதாநகரில் 30 பவுன், மூதாட் டியிடம் 14 பவுன், கொளத்துப்பாளையத்தில் 10 பவுன் மற்றும் பல்வேறு திருட்டு சம்பவங் களில் சுமார் 100 சவரனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் திருடு போன தோடு, திருட்டை தடுக்க முயன்ற பெண்ணின் கையை கத்தியால் வெட்டிய சம்பவமும் நடந் துள்ளது.
வாகனத் திருட்டுகள்
அதேபோல் 15க்கும் மேற்பட்ட இருசக் கர வாகனங்கள் திருடு போயுள்ளது. இருசக் கர வாகனத்தில் வந்து பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகள் வழிபறி செய் யப்பட்ட 20க்கும் மேற்பட்ட பதிவு செய்யப் பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத புகார்கள் உள்ளன. மேலும் தள்ளுவண்டி வியாபாரி கள் சிறிய கடைகளில் வைத்துள்ள பாத்திரங் கள் திருட்டு உள்ளிட்ட புகார் அளிக்கப்படாத சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
பண மோசடி'
இத்தோடு பண மோசடி (ஒயிட் காலர் கிரைம்) புகார்களில் என்ன நடவடிக்கை எடுக் கப்பட்டது என்பதே தெரியவில்லை. இந்த புகார்களில் இதுவரை 70 சதவீத வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் பீதியையும் அச் சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறை அலட்சியம்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக் கையில், தாராபுரம் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்கள் அச் சத்தை ஏற்படுத்துகிறது. காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் புகார்களை வாங்கு வதற்கும், வாங்கிய புகாருக்கு சிஎஸ்ஆர் எனப்படும் ஒப்புகை சீட்டு வழங்குவதில் குற் றப்பிரிவு காவல்துறையினர் அலட்சியம் காட் டுகின்றனர். இருசக்கர வாகன திருட்டு சம்ப வங்களில் புகார் வேண்டாம் நாங்கள் கண்டு பிடித்து தருகிறோம் என தெரிவித்து சமாதா னப்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடு படுகின்றனர். சிறு அளவிலான திருட்டு சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க சென்றால் நீங்கள் பாது காப்பாக வைப்பதை விட்டுவிட்டு திருட்டு போய்விட்டது என புகார் அளிக்க வருகிறீர் களா என ஏளனம் செய்கின்றனர். மேலும் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்குகளில், வழக்கின் நிலை குறித்து காவல்நிலையத் திற்கு கேட்க சென்றால் நாங்கள் கூப்பிடு வோம் அதுவரை எங்களை தொந்தரவு செய் யக்கூடாது என எரிந்து விழுகின்றனர் என சர மாரியாக குற்றம் சாட்டுகின்றனர்.
கிரைம் ரேட் கணக்கு
மேலும் தெரிவிக்கையில் திருட்டு உள் ளிட்ட சம்பவங்களில் வழக்குபதிவு செய்யப் பட்டால் கிரைம் ரேட் கூடும் அது போலீசா ருக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதால் புகார் பெற மறுக்கின்றனர். தொடர் திருட்டு சம்பவங் களை தடுப்பதற்கு முறையாக ரோந்து பணி கள் நடைபெறுவதில்லை. குற்றம் நடந்த சம் பவ இடத்திற்கு வேகமாக சென்று விசாரணை நடத்தும் அதிகாரிகள் அதோடு நின்று விடுகின்றனர். தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது திருடர்களுக்கு வசதியாக போய் விட்டது. அதனால் தாராபுரம் வட்டார பகுதிக ளுக்கு சென்றால் எந்த பயமும் இன்றி தங்க நகைகள் முதல் குண்டா சட்டி வரை திருட லாம் என தாராபுரம் காவல்துறைக்கு நன்றி தெரிவித்து திருடர்கள் சம்பவங்களில் ஈடுபடு வார்களோ என பொதுமக்கள் யூகிக்கின்ற னர். இனியாவது தாராபுரம் காவல்துறையி னர் விழித்துக் கொண்டு திருட்டு சம்பவங் களை தடுக்கும் நடவடிக்கைகளை மேற் கொள்வதோடு சம்பந்தப்பட்ட குற்றவாளி களை கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
பற்றாக்குறை
தாராபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத் தில் காவல் ஆய்வாளர் நியமிக்கப்பட வில்லை. சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளரே பொறுப்பு வகிக்கிறார். ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் சில காவலர்கள் மட்டுமே உள்ளதால் பணிச்சுமை காரணமாக குற்றவாளிகளை பிடிப்பதில் திணறி வருகின்றனர். எனினும் மாவட்ட காவல் துறை இந்த விசயத்தில் உரிய கவனம் செலுத்தி தேவையான ஆட்களை நிய மித்து தாராபுரம் வட்டாரத்தில் திருட்டு, வழிப் பறி, கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
(ஆர்.ராஜா)