உடுமலை, டிச.21- உடுமலை மூணார் சாலையில் இரு புறங்க ளிலும் இருக்கும் மரங்களை வெட்டும் நட வடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள் ளார்கள். திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலூக்கா வில் இருந்து அண்டை மாநிலமான கேர ளாவிற்குச் செல்லும் மூணார் சாலை மற்றும் சுற்றுலா தளமாக இருக்கும் திருமூர்த்தி மலைக்கு செல்லும் சாலையின் இருபுறங்களி லும் மக்களுக்குப் பயன்தரும் வகையில் ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ளன. இந்நிலையில் உடுமலை போடிபட்டி ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் உள்ள மரங் கள் வெட்டப்பட்டு வருவதைக் கண்டு பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள னர். இது குறித்து பொது மக்கள் தெரிவிக் கையில், பல ஆண்டுகள் வயது உள்ள மரங்களால் யாருக்கும் எவ்வித இடையூறும் இல்லாத நிலையில், தற்பொழுது வெட்டு வது ஏன்? இது போன்று மக்களுக்கு பயன் தரும் வகையில் இருக்கும் மரங்களை வெட்ட வதை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்றார்கள். மரம் வெட்டுப்படுவது குறித்து உடுமலை நெடுச்சாலைத் துறையின் உதவிப் பொறி யாளர் லோகநாதனிடம் கேட்ட போது, உடு மலை மூணார் சாலையில் உள்ள வளாவாடி பகுதியில் இருந்து வரும் சாலை இணையும் அண்ணாநகர் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படாத வகை யில் ரவுண்டான அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, அண்ணாநகர் பேருந்து நிறுத்த பகுதியில் இருந்து குரல்குட்டை பிரிவு வரை சாலையில் இரு புறங்களிலும் இருக் கும் 31 புளிய மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். அமிலம் ஊற்றிக் கொல்லப்படும் மரங்கள்: உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்கு ளம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமாக இருக்கும் சாலைகளின் இரு புறங்களும் பல ஆண்டுகள் பழமையான வேப்பமரம், புளியமரம், அரசமரம் உட்பட நாட்டு ரக மரங்கள் ஏராளமாக உள்ளன. பல ஆண்டுகளாக பசுமையாக இருந்த இந்த மரங்கள் தற்போது காய்ந்து போவது வழக் கமாக உள்ளது. இதனால் என்றும் பசுமை யாக இருக்கும் சாலைகள் தற்போது பசுமை இழந்து காணப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், பல வருடங்களுக்கு முன்பு மக்களுக்கு பயன்படும் வகையிலும், இயற்கையை நேசிக்கும் வகையிலும் சாலைகளின் இருபு றங்களிலும் பலன் தரும் நாட்டு ரக மரங்கள் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது சில சுய நலம் பிடித்தவர்கள் மரங்களில் ஓட்டை போட்டு அதில் அமிலத்தை ஊற்றி விடுகிறார்கள். இத னால் மரங்கள் இயற்கையாகக் காய்ந்து விடு வது போல் ஆகிவிடுகிறது. பின்னர் காய்ந்த மரத்தை அரசு அனுமதியுடன் வெட்டி விடு கிறார்கள். சாலை ஓரங்களில் உள்ள நிலத்தை வீட்டு மனையாகப் பிரித்து விற்பனை செய்ப வர்கள், புதிதாகப் பள்ளி கல்லூரிகளை கட்டு பவர்கள், தொழிற்சாலைகளுக்குப் புதிதாகச் சாலை அமைக்கும் போது அதற்கு இடையூ றாக உள்ள மரங்களை வெட்ட முடியாது என்று தெரிந்து, அமிலத்தை ஊற்றி மரத்தை அழித்து விடுகிறார்கள். இது போன்று சுய நலன் கருதி மரத்தை வெட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல முறை கோரிக்கை வைத்தும், இன்று வரை உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. மேலும், ஒரு மரத்தை வெட்டும் போது புதிதாக மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற அடிப்படையைக் கூட அதிகாரிகள் அமல்ப டுத்துவது இல்லை. மரங்கள் வெட்டப்படு வது தொடர்ந்தால் என்றும் பசுமையாக இருக் கும் சாலைகள் பாலைவனம் போல் ஆகும் நாள் விரைவில் வரும் என்கிறார்கள்.