சாலை வசதி செய்து தராத மாவட்ட நிர்வாகம் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க வந்த மக்கள்
ஈரோடு செப்.16- முறையான அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையை ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க பொதுமக்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு - சென்னிமலை சாலையில் உள்ள பெரும்பள்ளம் ஓடையின் அருகே இருந்த 520 குடியிருப்புகள் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்புறப்படுத்தப்பட்டு, 40 கி.மீ. தொலை விலுள்ள பாலத்தொழுவு ஊராட்சியில் வசந்தம் நகரில் வீட்டும னைகள் ஒதுக்கப்பட்டன. இதில் 150 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வரும் நிலையில், அப்பகுதியில் எந்தவித அடிப் படை வசதியும் செய்து தரவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக சாலை வசதி இல்லாததால், அவசர நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இப்பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள், தங்களது ஆதார் மற்றும் குடும்ப அட் டைகளை ஒப்படைப்பதாகக்கூறி திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, அவர் களை அழைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, பிரச்சனை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
உதகை, செப்.16- ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் தன்னிச்சை யாக செயல்படுவதாக, திமுகவைச் சேர்ந்த பேருராட்சி மன்றத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஜெகதளா பேரூ ராட்சி உள்ளது. இப்பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இப்பேரூராட்சி மன்றத் தலைவராக திமுகவைச் சேரந்த பங்கஜமும், துணைத்தலைவராக ஜெய்சங்கரும் உள்ளனர். தற்போது பேரூராட்சியில் புதியதாக செயல் அலு வலராக சரவண ராஜா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலை யில், திங்களன்று 13 ஆவது வார்டு ஓசட்டி பகுதியில் பேரூ ராட்சி சார்பாக செயல் அலுவலர் கிராம சபா கூட்டம் நடத்தியுள் ளார். பேரூராட்சித் தலைவருக்கு எவ்வித அழைப்பும் விடுக்காமல் தன்னிச்சையாக கூட்டம் நடத்தியதாக கூறப் படுகிறது. இதுகுறித்து பேரூராட்சித் தலைவர் பங்கஜம் கூறுகையில், செயல் அலுவலர் தன்னிச்சையாக செயல் படுவதாகவும், இதுகுறித்து முதல்வரிடம் புகாரளிக்க உள்ள தாகவும், தெரிவித்தார்.
மூத்தோர் கால்பந்து போட்டி
உதகை, செப்.16- கோத்தகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான மூத்தோர் கால்பந்து போட்டியில், நீலகிரி அணி வெற்றி பெற்றது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காந்தி மைதானத்தில், கடந்த இரண்டு நாட்களாக எடப்பள்ளி பெள்ளி கவுடர் நினைவு மாநில அளவிலான மூத்தோர் கால்பந்து போட்டி நடை பெற்றது. இப்போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டியில் நீலகிரி ப்ளூ அணிக்கும், கேஎப்சி நீலகிரி அணியும் மோதின. இறுதியில், நீலகிரி ப்ளூ அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் உதவி!
சேலம், செப்.16- மேட்டூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆடுகளை கிராம மக்கள் கொடுத்து, உதவியுள்ளனர்.சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக சிறுத்தை ஒன்று கிராமத்தில் நுழைந்து ஆடு, கோழிகளை வேட்டையாடி வரு கிறது. மேட்டூர் வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா வைத்தும், கூண்டு வைத்தும் சிறுத்தையை பிடிக்க முயற் சித்து வருகின்றனர். ஆனால், வனத்துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. வனத்துறையினர் வைத்த கூண்டுக் குள் நுழையாமல், சிறுத்தை போக்கு காட்டி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்ட ஆடுகள், 10க்கும் மேற்பட்ட கோழிகளை சிறுத்தை வேட்டையாடி உள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷாங் ரவி, உதவி வன பாதுகாவலர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வன காவலர்கள் முகாமிட்டு, சிறுத்தையை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்த போது, பண்ணவாடி அருகே கருங்காடு என்ற பகுதியில் 2 சிறுத்தை கள் நடமாடுவது தெரிய வந்துள்ளது. சிறுத்தைகளை பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. 4 இடங்களில் கூண்டுகளில் கட்டுவதற்கு கிராம மக்கள் தங்களின் ஆடு களை கொடுத்துள்ளனர். ஒரு இடத்தில் உள்ள கூண்டில் நாய் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஒரு சிறுத்தை ஊருக்குள் புகுந்துள்ளதாக தகவல் பரவிய நிலையில், தற்போது 2 சிறுத்தைகளின் நடமாட்டம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ள னர்.
கஞ்சா விற்பனை: ஒருவர் கைது
ஈரோடு, செப்.16- ஈரோடு மாவட்டம், நசிய னூர் சாலை, வில்லரசம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு வடக்கு காவல் துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது சந்தேகப்பட டும்படியாக நின்று கொண்டி ருந்த ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் கருங்கல்பாளையம், சொக்காய்தோட்டம் பகுதி யைச் சேர்ந்த ஹரிபிரசாத் (40) என்பவதும், கஞ்சா பொட்டலங்களை விற்ப னைக்கு பதுக்கி வைத்தி ருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், விற்பனைக்காக வைத்தி ருந்த 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அரசு மருத்துவமனைக்கு முன்பு கழிவுநீர்
திருப்பூர், செப்.16- திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முன்பு ஓடும் சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியதிற்கு உட்பட்ட கிளைகள் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் தெற்கு ஒன்றியதிற்கு உட்பட்ட கிளை மாநாடுகள் செப்.8ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், இடுவாய் வடக்கு கிளைச் செயலாளராக கே. கருப்புசாமி, இடுவாய் தெற்கு கிளைச் செய லாளராக சுந்தரம், சீரானம்பாளையம் 1 கிளை செயலாளராக அ.ப.ரத்தினசாமி, சீரானம் பாளையம் 2 கிளைச் செயலாளராக ஈ. ராஜேஷ், பாரதிபுரம் வடக்கு கிளைச் செய லாளராக ராமமூர்த்தி, பாரதிபுரம் தெற்கு கிளைச் செயலாளராக ஏ.கே.ராமமூர்த்தி, சுல்தான்பேட்டை கிளைச் செயலாளராக கந்த சாமி, இடுவம்பாளையம் மாதர் கிளைச் செய லாளராக எஸ்.நாகராணி, குப்பாண்டம் பாளையம் கிளைச் செயலாளராக குமார், பாரதி நகர் கிளைச் செயலாளராக பி. நாகராஜ், ஏபிநகர் கிளைச் செயலாளராக பிரபு, வீரபாண்டி கிளைச் செயலாளராக எஸ்.சண்மு கம், செட்டிபாளையம் கிளைச் செயலாளராக கே.கணேசன், சந்திராபுரம் கிளைச் செயலா ளராக ராமர், செரங்காடு கிளைச் செயலாளராக ஈஸ்வரன், பாரதி நகர் மாதர் கிளைச் செயலா ளராக பி.லட்சுமி, சிட்கோ கிளைச் செயலா ளராக முகமது ஆஷிக், பொன்னாபுரம் கிளைச் செயலாளராக ஏ.செல்வன், சிட்கோ மாதர் கிளைச் செயலாளராக வி.ஜானகி, ஹவு சிங் யூனிட் பெருமால், தந்தை பெரியார் நகர் மாதர் கிளைச் செயலாளராக ராஜேஸ்வரி, வஞ் சிநகர் கிளைச் செயலாளராக முத்துசாமி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், இந்த மாநாட்டில் தெற்கு ஒன்றியப் பகுதிகளில் உள்ள ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க கூடாது. திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு செல்லும் சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப் பாடு, சாக்கடை கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாடுகளில், மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் சி.மூர்த்தி, டி.ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.கணேசன், பி.லட் சுமி உட்பட தெற்கு ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
புதிய திட்டங்கள் துவக்கி வைப்பு
திருப்பூர், செப்.16- திருப்பூர் மாவட்டம் சாம ளாபுரம் பேரூராட்சி அலுவ லக வளாகத்தில் ரூபாய் 4.54 கோடி மதிப்பீட்டில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் புதிய அலுவலக கட்டிடம், கலைஞர் நகர்ப்புற மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கும் பணிகள், அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி மற் றும் தூய்மை இந்தியா திட் டத்தின் கீழ் சமுதாய கழிப் பிடம் அமைக்கும் பணி என 10 புதிய திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திங்களன்று துவக்கி வைத்தார்.
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல்!
உதகை, செப்.16- தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட் டுப் போட்டிகளில், ஸ்ரீமதுரை அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை நடத்திய விளையாட்டுப் போட்டிக ளில் நீலகிரி மாவட்டம், ஸ்ரீமதுரை அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில் முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெற்ற உள்ள விளையாட்டுப் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருந்தனர். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக் கான விளையாட்டுப் போட்டிகளில், மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோகோ போட்டியில் ஸ்ரீ மதுரை அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்து ரூ.36 ஆயிரம் பரிசுத்தொகை பெற்றுள் ளனர். மேலும், மாணவியர் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து ரூ.24 ஆயிரம் பரிசுத்தொகை பெற்றுள்ளனர். ஸ்ரீமதுரை பள்ளி யின் ஆறு மாணவர்கள் மற்றும் நான்கு மாணவிகள் கோக்கோ மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரையும் ஸ்ரீமதுரை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரி யர் கழக உறுப்பினர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளை யும் தெரிவித்து வருகின்றனர்.