சேலம், ஜன.12- எடப்பாடி அருகே அரசு தொடக் கப்பள்ளியின் ஆண்டு விழாவை முன்னிட்டு, அப்பகுதி பொதுமக்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்களை சாரட் வண்டியில் மற்றும் நடந்து சென்று பள்ளிக்கு வழங்கினார். சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியம், ரெட்டிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன் றிய தொடக்கப்பள்ளியில் தமிழ் மற் றும் ஆங்கிலம் என இரு பிரிவுகளில் மொத்தம் 140 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியா னது மாவட்ட அளவில் சிறந்த பள் ளிக்கான காமராஜர் விருது மற்றும் மாநில அளவில் சிறந்த எழுத்தறிவு மையத்திற்கான விருது பெற்றுள் ளது. இந்நிலையில், இப்பள்ளியின் ஆண்டு விழாவை முன்னிட்டு, கொங் கணாபுரம் ஒன்றிய கிராமமக்கள் ஒன்று சேர்ந்து பள்ளிக்குத் தேவை யான நோட்டு, புத்தகங்கள், பேனா, சேர், டேபிள், கேரம் போர்டு, ரப்பர், பென்சில், மற்றும் விளையாட்டு உப கரணங்கள் என ரூ.2 லட்சம் மதிப் பிலான பொருட்களை பள்ளிக்கு வழங் கியுள்ளனர். முன்னதாக, கொங்க ணாபுரம் பிரிவு சாலையில் இருந்து சாரட் வண்டியில் மேளதாளங்களு டன், பொதுமக்கள் சீர்வரிசையாக மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று பள்ளிக்கு வழங்கி னர். சீர்வரிசையுடன் வந்தவர்களை பள்ளி மாணவர்கள் பூங்கொத்து கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் உற்சா கமாக வரவேற்றனர். இந்நிகழ்ச்சி அப்பகுதியினரிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.