அவிநாசி, அக்.20- அவிநாசி அருகே பட்டறை பேருந்து சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படு வதை தடுக்கும் வகையில் வேகத்தடை மற்றும் சென்டர் மீடியா அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி சாலையில் பணியாட் களை ஏற்றிச் செல்லும் பனியன் நிறுவன வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல் வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக அவிநாசி - சேவூர் சாலை என்பது, கோபி, புளியம்பட்டி, சக்தி, மைசூர், ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இதில் நாள்தோறும் 1000 க்கும் மேற்பட்ட தனி யார் மற்றும் அரசு பேருந்துகள், பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் திருப்பூர் அருகாமையில் உள்ளதால் 200க்கும் மேற்பட்ட பனி யன் நிறுவன வாகனங்கள் தொழிலா ளர்களை ஏற்றிக் கொண்டு சென்று வரு கிறது. இவ்வாகனங்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் சென்று வரும் போது அதிவேகமாகச் செல்வதாலும், ஒன்றை ஒன்று முந்தி செல்வதாலும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அன்றாடம் செல் லும் பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட் டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே இருபுறமும் வரும் வாகனங் கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும் போது எதிரே வரும் வாகனத்தின் மீது மோதிக் கொள்ளாமல் இருக்க சாலை யின் நடுவே தடுப்புச் சுவர் (சென்டர் மீடியா) அமைக்க வேண்டும். மேலும், வேகத்தைக் கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும் எனக் கோரி அவி நாசி -சேவூர் சாலை பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரை வில் வேகத்தடை அமைக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.