districts

முறையாக பராமரிக்கப்படாத சுத்திகரிப்பு நிலையம்: மக்கள் முற்றுகை

கோவை, டிச. 4- உக்கடம் அன்பு நகர் பகுதியில் உள்ள  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறை யாக பராமரிக்கப்படாததால் நோய் தொற்று  ஏற்படுவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த  நூற்றுக்கும் மேற்பட்ட கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை மாநகராட்சி உக்கடம் புல்லுக் காடு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள் பெரும்பாலும் அங்கு அனுப்பப்பட்டு பிரித்தெடுக்கப்படும். இந்நிலையில் அந்த நிலையத்தில் முறை யாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்வ தில்லை எனவும், இதனால் துர்நாற்றம் வீசி  பல்வேறு நோய்கள், உடல் உபாதைகள், வரு வதாகவும் கூறி, அதன் அருகில் வசிக்கும் அன்பு நகர் பகுதி மக்கள் கோவை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  இது குறித்து அவர்கள் மேலும் கூறுகை யில், அன்பு நகர் பகுதியில் வசித்து வரும்  சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும் பங்கள், இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யத்தால் பாதிக்கப்படுகின்றனர். அன்பு நக ரில் அமையப் பெற்றுள்ள குப்பைகளை தரம்  பிரிக்கும் மையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் துர்நாற்றத்தால் கடும்  அவதிப்பட்டு வருகின்றோம். தோல் நோய்  மற்றும் சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்க ளுக்கு ஆளாகி வருவதாகவும், இது குறித்து  பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்த போதிலும், எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. குப்பைகளை எடுத்து வரும் வாகனங்களுக்கு கூட அப்ப குதியில் சாலை வசதி இல்லை. அப்பகு தியை காலி செய்து போவது தான் தங்க ளுக்கு அடுத்த வழி. இப்பகுதியில் குடி தண்ணீர் மாசுபட்டுள்ளதாகவும், தெரு நாய் கள் தொல்லையும் அதிகரித்து வருவதா கவும் தெரிவித்தனர். முன்னதாக, மனு அளிக்க வந்த பெண் கள் அப்பகுதியில் சேகரிக்கபட்ட குப்பை களை கையில் ஏந்தியபடி வந்ததால் ஆட்சி யர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட் டது.