districts

img

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மக்கள் அவதி

சேலம், பிப்.3- தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி யுள்ளது. பகல் நேரத்தில் வெயிலின் தாக் கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதாங்களில் வட கிழக்கு பருவமழை பெய்யும். இந்நிலை யில் கடந்த 2020 ஆம் ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை சராசரியாக பெய் தது. 2020 ஆம் ஆண்டை காட்டிலும் 2021 ஆம் ஆண்டில் மழையளவு அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. கடந்தாண்டு சராசரியாக மழை  பெய்து இருந்தாலும், ஒரு சில ஏரி, குளங் கள் வறண்டு தான் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக மழை இல்லா மல் வறண்ட வானிலையே நிலவுகிறது. இந்த நிலையில் நடப்பாண்டு கோடை காலம் துவங்க இன்னும் ஓரிரு வாரமே இருக்கும்பட்சத்தில் இப்போதே வெயின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார மாக வெயிலின் அளவு அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக ஈரோடு, நாமக் கல், சென்ன, வேலூர் திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக் கம் அதிகமாக காணப்படுகிறது.

சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கத்தால், கடந்த சில நாட்களாக இளநீர், வெள்ளரிக்காய், ஜூஸ் வகைகள் உள்ளிட்டவைகளின் வியாபாரம் அதி கரித்துள்ளது. கோடையில் மழை இல்லா மல் இதே நிலை நீடித்தால் வெயிலின் தாக் கம் அதிகரிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர் வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வ லர்கள் கூறுகையில், தமிழகத்தில் நடப் பாண்டு மழை அதிகளவில் பெய்தது. குளிர்காலமும் வாட்டி வதைத்தது. இது ஒரு புறமிருக்க, பகலில் வெயிலும் கடுமை யாக உள்ளது. இதுவரை இல்லாத வித்தி யாசமான காலநிலையாக உள்ளது. இது பல்வேறு நோய்களுக்கும் வழி வகுத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்கள் கோடைகாலமாகும் இந்த மாதங்கள் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே, வெயிலின் தாக்கம் தென்படும். ஆனால் நடப்பாண்டில் பிப்ரவரி முதல் வாரத்திலேயே, வெயிலின் தாக்கம் அதி கம் உள்ளது வியப்பளிக்கிறது. ஒரு சில  மாவட்டங்களில் 90 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவாகி உள்ளது. இப்போதே இந்த நிலை என்றால், முழுமையாக கோடை காலம் துவங்கும் ஏப்ரல் முதல் நாளோ கடும் வெப்பம் உருவாக வாய்ப் புள்ளது, என்றனர்.