நாமக்கல், நவ.19- பள்ளிபாளையம் நகராட்சிக்குட் பட்ட பகுதியில் குடிநீரின் நிறம் மாறி வந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சிய டைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் நகராட்சி, 12 ஆவது வார்டுக்குட் பட்ட பகுதியில் ஏராளமான குடியிருப்பு கள் உள்ளன. இந்நிலையில், திங்க ளன்று இப்பகுதியை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள குழாய்களில், குடிநீர் நிறம் மாறி சிவப்பு நிறத்தில் வந்தது. இதனால் அதிர்ச்சிய டைந்த பொதுமக்கள், நகராட்சி நிர்வா கத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நகராட்சி ஆணையர், பொறியா ளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட அதி காரிகள், ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது பழைய ஈ.ஆர்.தியேட்டர் சாலையில், பயன்படுத்தப்படாமல் உள்ள கிணற்றி லுள்ள தண்ணீர் முழுவதுமாக நிறம் மாறி சிவப்பு நிறத்தில் இருந்ததை கண்டு நகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந் தனர். இதுகுறித்து உடனடியாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம் பவ இடத்திற்கு வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதுகுறித்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுவட்டார பகுதிகளில் 2 கிலோ மீட் டர் தூரத்திற்கு எந்த சாயப்பட்டறையும் இல்லாத நிலையில், பொதுமக்கள் அன் றாடம் குடிநீருக்காக பயன்படுத்தும் போர்வெல் குழாய் நீர் நிறம் மாறி வந் தது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் சாயப்பட்டறை யிலிருந்து வெளியேறும் சாய கழிவு நீர் சாக்கடையிலிருந்து தண்ணீர் கலந்து இதுபோல் நீர் வெளியேறுகிறதா? அல் லது வேறு ஏதேனும் காரணங்கள் உள் ளதா? என தொடர்ந்து மாசு கட்டுப் பாட்டு வரை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.