districts

img

மதுபானக் கடையை மூடக்கோரி மக்கள் போராட்டம்

அவிநாசி, ஜன.2 அவிநாசி அருகே  பந்தம் பாளையத்தில் மீண்டும் திறக் கப்பட்ட அரசு மதுபானக் கடை, மனமகிழ் மன்றத்தை  மூடக் கோரி முன்று ஊராட்சி களைச் சேர்ந்த பொதுமக் கள் செவ்வாயன்று போராட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், அவி நாசி வட்டம், சேவூர் பந்தம்பாளையம் பகுதி யில் அரசு மதுபானக் கடை, மனமகிழ் மன் றம் அமைப்பதற்கான நடவடிக்கை கடந்த ஓராண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. மூன்று ஊராட்சிகளை மையப்படுத்தி உள்ள இந்தப் பகுதியில் அதிக குடியிருப்புகள் உள் ளன. இங்கு மதுக்கடை அமைக்க கூடாது என முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், வட் டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் இப் பகுதி மக்கள் மனு அளித்து எதிர்ப்பு தெரி வித்து வந்தனர். மேலும் வேட்டுவபாளையம், சேவூர், முறியாண்டம்பாளையம் ஆகிய 3  ஊராட்சிகளின் கிராம சபை கூட்டங்களிலும் இந்த மதுபானக் கடைக்கு அனுமதி வழங்கக்  கூடாது என தீர்மானம் நிறைவேற்றினர். இவ் வளவு எதிர்ப்பு இருந்த நிலையிலும், கடந்த செப்டம்பர் மாதம் மதுபானக் கடை திறக்கப் பட்டு செயல்பட்டது. இதையடுத்து அப் போதே ஒரு நாள் முழுவதும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைய டுத்து, பேச்சுவார்த்தை நடத்திய வருவாய்த் துறை மற்றும் போலீசார் ஒரு வாரத்துக் குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த னர். தொடர்ந்து ஒரு வாரம் மட்டும் மூடப்பட் டிருந்த மதுபானக்கடை மீண்டும் திறக்கப் பட்டுள்ளது.  இந்த மதுபானக்கடை திறப்பால், பொது மக்கள், பள்ளி மாணவர்கள் பாதிப்புக்குள் ளாகி வருகின்றனர். எனவே, உடனடியாக இந்த கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி அமைதி வழி போராட்டத்தை முன்னெடுத்தனர். வேட் டுவபாளையம், முறியாண்டம்பாளைம், சேவூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவ சாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.