districts

img

சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் மக்கள் போராட்டம்

திருப்பூர் ஜூலை 4- ஆலங்காடு பகுதியில் சாக்கடை கால் வாய் அமைக்கும் பணிக்கு இடையூறு ஏற்ப டுத்தும் விதமாக வாகனங்களை நிறுத்தியவர் களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடு பட்டார்கள். திருப்பூர் மாநாகராட்சி 54 ஆவது வார்டு  ஆலங்காடு பகுதியில் 400க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி  இல்லை என்று பல ஆண்டுகளாக மக்கள் போராடியதன் மூலம் தற்பொழுது அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. ஆலங்காடு கடைசி வீதி மேடு பகுதியாக  உள்ளதால் கழிவு நீர் செல்ல ஏதுவாக தனியார்  இடத்தின் வழியாக குழாய் அமைத்து கழிவு நீரை கொண்டு செல்ல மாநாகராட்சி மூலம்  முடிவு செய்து, அதற்கான பணிகளும் ஞாயி றன்று தொடங்கியது. பொக்லைன்  எந்திரம் மூலமாக குழாய் பதிக்க குழி தோண் டிய போது, அதற்கு இடையூறு ஏற்படுத்தும்  விதமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், பணிகள் தடைபட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், 54 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அருணாச்சலம் தலைமையில்  முற்றுகையிட்டு இடையூறாக வாகனங்களை  நிறுத்தியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். மேலும், உடனடியாக வாகனங் களை எடுத்து பணி செய்யவிட வேண்டும் என் றும், இல்லையென்றால் போராட்டம் நடத்து வோம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து வாகனங்களை அதன் உரிமை யாளர்கள் உடனடியாக எடுத்தனர். பின்பு பணி தொடங்கியது.