மாலை நேர உழவர் சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம்
கோவை, நவ.29- ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் மாலை நேர உழவர் சந்தை இயங்கி வருகிறது. இதில் குறைந்த விலையில் மளிகை பொருட்கள் கிடைப்பதால், இங்கு பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் உழவர் சந்தைகள் கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த உழவர் சந்தை கள் பல்வேறு வசதிகளுடன் பயன்பாட்டுக்கு கொண்டுவரப் பட்டு, தமிழகம் முழுவதும் 100 உழவர் சந்தைகள் செயல்பட துவங்கி உள்ளன. இந்த சந்தைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படுகிறது. இந்நிலையில். மாலை நேரங்களிலும் உழவர் சந்தை கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை என 37 மாலை நேர உழவர் சந்தைகள் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகின்றன. அதன்ஒருபகுதியாக கோவை ஆர்.எஸ்.புரத்தில் இந்த மாலை நேர உழவர் சந்தை செயல் படுகிறது. காலை நேர உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்வது போல் மாலை நேர உழவர் சந்தையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் சமையல் எண்ணெய் வகைகள், சிறு தானியங்கள், சாமை, தினை மற்றும் அரிசி வகைகள் போன்றவைகள் விற்பனை செய்யப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் 24 உழவர் உற்பத்தியாளர் நிறுவ னங்கள் உள்ளன. இதில் 12 நிறுவனங்களின் பொருட்கள் முதற்கட்டமாக மாலை நேர உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. மளிகை பொருட்கள் வெளியில் உள்ள கடைகளை காட்டிலும் உழவர் சந்தையில் விலை குறைவாக கிடைப்பதால் இதனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வரு கின்றனர்.
சட்டக் கல்லூரி மாணவர் கொலை: குண்டர் சட்டத்தில் இருவர் கைது
நாமக்கல், நவ.29- நாமக்கல் சட்டக் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள் ளனர். நாமக்கல்-கொசவம்பட்டியைச் சேர்ந்த ஜீவா என்பவரது மகன் சங்கீத்குமார் (21). இவா், ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி ஊருக்கு வந்திருந்த போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில், அதே பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் (30), மெளலீஸ்வரன் (25), பரத் (24) ஆகியோர் இணைந்து சங்கீத் குமாரை கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் மூவரும் கைது செய்யப்பட்டனர். இதில் அலெக்ஸ், மெளலீஸ்வரன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நாமக்கல் காவல் ஆய்வாளர் சங்கரபாண்டியன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்கிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதனடிப்படையில், இருவரும் குண்டர் சட்டத் தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உத்தரவுக் கடி தத்தை சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.
ஏலத்தில் முன்னுரிமை - மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் மனு
ஈரோடு, நவ. 29- மீன் ஏலத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் வாராந்திர கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சந்தேஷினி சந்திரா தலைமையில் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 283 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை உரிய அலுவலர்களிடம் மூலம் நடவடிக்கையெடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். அந்தியூர் பெஸ்தவர் மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கத் தினர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். அதில், உள் நாட்டு மீனவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான உள்நாட்டு நீர் நிலை களில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறோம். அதற்கு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை அடிப்படை யில் அரசு நிர்ணயிக்கும் குத்தகை தொகையை செலுத்தி மீன் குஞ்சுகள் இருப்பை பாதுகாத்து, பராமரித்து, மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். மாவட்டத்தில் 27 மீனவர் கூட்டுறவு சங்கங்களில் பல நூறு குடும்பத்தினர் உள்ளனர். அந்தியூர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இத்தொழிலையே வாழ்வாதார மாக கொண்டுள்ளோம். இந்நிலையில் மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் பொது ஏலம் விடலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மீன்வளத்துறை மாவட்ட நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதனை எதிர்த்து மீனவ கூட்டுறவு சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளது. எனினும் மாவட்ட அளவில் ஏலத்தை நடைமுறைப்படுத்த 10 பேர் கொண்ட குழு அமைக்க மீன்வளத்துறை திட்ட மிட்டுள்ளது. மீன் வளத்துறையின் இத்தகைய செயல்பாட்டி னால் தனி நபர்கள் மீன் பாசி குத்தகை பெற நீர்வளத் துறை தலையிட்டு உதவுகிறது. இது நீதிமன்ற உத்தர வுக்கு எதிரானது. இதனால் மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன் ஏலம் கிடைக்காத நிலை ஏற்படும். மேலும், தனி நபர்களிடம் மீனவர்கள் கை கட்டி நிற்கும் நிலை மீண்டும் ஏற்படும். குத்தகை தொகையை செலுத்த மீனவர் கூட்டுறவு சங் கங்கள் தயாராக உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் நீர் நிலைகள் நிரம்பி, மீன் குஞ்சுகள் அதிகம் உள்ள நிலையில், மீன் வளத்துறை மீன், மீன் பாசி ஏலத்தை நடத்தாமல் உள்ளது. விரைவில் எங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஏலத்தை நடத்த வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் மனு பவானி அருகே உள்ள ஒலகடத்தை சேர்ந்த திருநங்கை நான்சி உள்பட பலர் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, ஒலகடம், ஈஸ்வரன் கோயில் பகுதியில் அரசு சார்பில் 9 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப் பட்டுள்ளது. அதில் இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும் என கோரியுள்ளனர்.
மயானம் ஆக்கிரமிப்பு
கோவை, நவ. 29 - பொது மயானம் ஆக்கி ரமிப்பு செய்யப்படுவதாக கூறி திராவிட தமிழர் கட்சி யினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திராவிட தமிழர் கட்சி கோவை மாவட்ட மதுக்கரை ஒன்றிய செயலாளர் முருகன் மதுக்கரை மார்க்கெட் பகுதி மக்களுடன் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் , இதில்,மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள பொது மயானத்தில் குப்பை கொட்டியும், இடத்தை ஆக் கிரமிப்பு செய்தும் வருகின் றனர். ஆக்கிரமிப்பு செய்த வர்களை மீது நடவடிக்கை எடுத்தும், பொது மயானத் தை மீட்டுக்கொடுக்கும்படி அதில் வலியுறுத்தியுள் ளனர்.
பி.ஐ.எஸ். அதிகாரிகள் சோதனை
கோவை. நவ. 29 - இந்திய தர நிர்ணய அமைவன (பி.ஐ.எஸ்) அதி காரிகள் கோவை அவிநாசி சாலையில் கே.கே. லேன் பகுதியில் உள்ள மின்சாத னங்கள் விற்பனை கடை யில் சோதனையில் ஈடு பட்டனர். இதில், இந்திய தர முத்திரை இல்லாமல் மின் சாதன பொருட்கள் விற்ப னையில் ஈடுபட்டதை கண்ட றிந்து, முத்திரை இல்லாத மின் கேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து கோவை கிளையின் இந்திய தர நிர்ணய தலைமை அதிகாரி கோபிநாத் கூறுகையில், ‘‘இந்திய தர நிர்ணய அமை வன சட்டத்தின் படி இக்குற் றத்திற்கு அதிகபட்ச தண் டனையாக ரூ.2 லட்சம் வரை அல்வது 2 வருட சிறை விதிக் கப்படும். குக்கர், எல்பிஜி அடுப்புகள், சிமெண்ட் போன்ற நுகர்வோர் தயா ரிப்புகளில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் முத்திரை இல்லாமல் விற் பனை மேற்கொள்ளப்பட் டால் அதை பற்றிய தகவல் களை பொதுமக்கள் தொலைபேசி : 0422-2240141, 2249016, 2245984 என்ற எண்களில் தெரிவிக்கலாம் என்றார்.
நீலகிரியில் தொடர்மழை, பனி காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்தது
உதகை, நவ.29- நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் பனி காரணமாக உதகை மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டை கோஸ் போன்ற காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா உட்பட வெளி மாநிலங்களுக்கும், கோவை, திருப்பூர் உட்பட தமிழகத்தின் பல் வேறு மாவட்டங்களுக்கு விற்ப னைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. உதகை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகளை அறுவடை செய்த பின்னர் சிறு, குறு விவசாயிகள் உதகை நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக் கின்றனர். இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் லேசான தொடர் மழை மற்றும் கடும் பனிப் பொழிவு காரணமாக அறுவடைக்கு தயாராகியும், காய்கறிகளை அறு வடை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் சில இடங்களில் உருளைக்கிழங்கு அறுவடை செய்யாமல் விடப்பட்டது. தொடர் மழையால் உதகை நக ராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்து உள்ளது. விளை நிலங்களில் மண் தொடர்ந்து ஈரப் பதமாக இருப்பதால் காய்கறிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காய்கறிகள் வரத்து குறைந்ததால் விலை உயரும் அபாயமும் உள்ளது. அதன்படி செவ்வாயன்று காலை நிலவரப்படி உதகை மார்க் கெட்டில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.50, கேரட் ரூ.40-45, பீட்ரூட் ரூ.40 - 50, முள்ளங்கி ரூ.20 - 25, பீன்ஸ் ரூ.20 – 25, முட்டை கோஸ் ரூ.10 - 12, சிவப்பு நிற கோஸ் ரூ.10 - 15, பட்டாணி ரூ.135 – 150, டபுள் பீன்ஸ் ரூ.70, உதகை அவரை ரூ.110 - 140க்கு ஏலம் போனது. இதுகுறித்து வியாபாரிகள் கூறு கையில், மழையால் உதகை நக ராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதற் கிடையே உள்ளூர் பீன்ஸ் வரத்து அதிகரித்திருப்பதால் விலை குறைந் துள்ளது. உதகை நகராட்சி மார்க் கெட் மண்டிகளுக்கு தினமும் 8 டன் வரை காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். மழை மற்றும் காலநிலை மாற்றத்தால், 3 டன் வரை காய்கறிகள் மட்டுமே வந்துள்ளது. இதனால், காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளது, என்றார்.
பெண் தற்கொலை முயற்சி காவலர் பணியிடை நீக்கம்
அவிநாசி, நவ.29- அவிநாசியில் பெண் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதையடுத்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான காவலர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய் யப்பட்டார். சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் அருள்குமார் (33). இவர் அவிநாசி காவல் நிலையத்தில் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளநிலையில், அவிநாசி காசிகவுண் டன்புதூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டின் அருகே வசித்து வரும் 27 வயதுப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக் குள் ஏற்பட்ட தகராறில், அப்பெண் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின்பே ரில், அவிநாசி போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவலர் அருள்குமாரைக் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, அவர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) காலை நேர தொடர் வகுப்புகள்
அரசியல் சாசன விழுமியங்களும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பும் 01.12.2022 வியாழக்கிழமை காலை 6.30 - 7.30 மணி தலைப்பு: இந்திய விடுதலையும், அரசியல் சாசன உருவாக்கமும் கருத்துரை: வ.ராஜமாணிக்கம்
துலுக்கமுத்தூர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் போராட்டம்
அவிநாசி, நவ.29- அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தில் உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சங்க உறுப்பினர்கள் கூறியதாவது: ஏற்க னவே ஏ கிரேடாக இருந்த சங்கம் பி கிரேடாக மாறி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஆனால் இங்கு பணியாற்றும் கணக்காளருக்கு மாதம் ரூ.58 ஆயிரம் சம்பளத் தொகையாக வழங்கப் படுகிறது. ஏ கிரேடு மதிப்பில் உள்ள அல்லது வருமானம் நிறைந்த சங்கத்திற்கு கணக்கா ளரை மாற்றம் செய்யதால், நஷ்டத்தை ஈடு கட்டலாம் என பல முறை தெரியப்படுத்தியும் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக் கவில்லை. ஆகவே போராட்டத்தில் ஈடுபட் டுள்ளோம். என்றனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.அவிநாசியப்பன் கூறியதா வது, சங்கத்தில் கணக்காளர் 30 ஆண்டுக ளுக்கு மேலாக பணியாற்றி வருவதால் பணிக் கால அடிப்படையில் கூடுதலாக சம்பளம் வழங்கப்படுகிறது. இது குறித்து கூட்டுறவு உயர் அலுவலர்களிடம் தெரியப்படுத்தியுள் ளோம் உத்தரவு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விரைவில் மீண்டும் ஏ கிரேடு மதிப்பிற்கு உயர போதுமான நடவ டிக்கைகள் மேற்கொண்ட வருகிறோம் என் றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
டெஸ்ட் பர்ச்சேஸ் முறைக்கு அவகாசம் வழங்க வணிகர்கள் கோரிக்கை
திருப்பூர், நவ. 29- வணிகர்களின் மீதான டெஸ்ட் பர்ச்சேஸ் முறைக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்க கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு சார்பில் வணிகவரித் துறை அலுவல கத்தில் மனு அளிக்கப்பட்டது. வணிகவரித் துறையினரால் கடந்த மார்ச் மாதத்தில் சில்லறை கடைகளில் ஆய்வு செய் வது சம்பந்தமாகவும், டெஸ்ட் பர்சேஸ் செய் வது சம்பந்தமாக அறிவிப்புகள் வெளியிட் டபோது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து வணிகர் களின் சார்பாக கருத்துக்களும், எதிர்ப்புக ளும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வணிகவரித் துறை அதிகா ரிகள் டெஸ்ட் பர்ச்சேஸ் எனும் பெயரில் சில் லரை வணிகம் செய்யும் வணிகர்களிடம் பொருட்கள் வாங்கி அதனை டெஸ்ட் பர்ச்சேஸ் என குறிப்பிட்டு அதற்கு 20,000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படு கிறது. இதனால் சில்லறை வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் டெஸ்ட் பர்ச்சேஸ் குறித்து வணிகர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். டெஸ்ட் பர்ச் சேஸ் முறைக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார் பில் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள வணி கவரித்துறை அலுவலகத்தில் துணை ஆணையரிடம் வணிகர்கள் மனு அளித்த னர்.
மூலனூரில் ரூ. 73 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
மூலனூரில் ரூ. 73 லட்சத்திற்கு பருத்தி ஏலம் தாராபுரம், நவ. 29- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 73 லட்சத் திற்கு பருத்தி ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்ப னைகூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறை முக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கருர், திருச்சி, திண் டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 259 விவசா யிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த னர். அதேபோல் பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். அதிகபட்ச விலை யாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 9 ஆயிரத்து 819 க்கும் குறைந் தபட்ச விலையாக ரூ. 7 ஆயிரத்து 550 க்கும் சராசரி விலை யாக ரூ. 8 ஆயிரத்து 880 க்கும் விலை போனது. மொத்தம் 2572 மூட்டைகள் 853 குவிண்டால் பருத்தி ரூ. 73 லட்சத்து 48 ஆயி ரத்து 432 க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் 13 வணிகர்கள் பங்கேற்றனர். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பா ளர் சிவக்குமார் செய்திருந்தார்.
தண்டவாள பராமரிப்பு பணியால் மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்
சேலம், நவ.29- சேலம் ஜங்சன் ரயில்வே நிலையம் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணியால், சேலம் வழியாக செல்லும் 16 ரயில் கள், 3 நாட்களுக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சேலம் ஜங்சன் ரயில்வே நிலையம் யார்டு பகுதியில் தண்ட வாள சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் மூன்று நாட்களுக்கு சேலம் வழியாக செல்லும் 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 16 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக் கப்படும் என கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை சென்ட்ரல்-பாலக்காடு எக்ஸ் பிரஸ் (22651) புதன்கிழமை முதல் டிசம்பர் 1,2ஆம் தேதிகளில் சேலம், நாமக்கல், கரூர் வரித்தடத்திற்கு பதிலாக சென்னை, எழும்பூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல் வழியாக இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், பாலக்காடு-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (22652) டிசம்பர் 1,2 ஆம் தேதிகளில் திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16339), புதன் கிழமை, டிசம்பர் 1ஆம் தேதிகளிலும், பெங்களூரு-நாகர் கோவில் எக்ஸ்பிரஸ் (17235) டிசம்பர் 1,2ஆம் தேதிகளி லும், தாதர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (11021) நவம்பர் 29,30 ஆகிய தேதிகளில் சேலம், ஈரோடு, கரூர் வழித்தடத்தில் மாற்றி இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் (16340) வரும் 2ஆம் தேதியும், நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் (17236) நவம்பர் 30, டிசம்பர் 1,2 ஆம் தேதிகளில் கரூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படு கிறது. இதேபோல், சென்னை சென்ட்ரல் – மதுரை எக்ஸ்பிரஸ் (20601) நவம்பர் 30ஆம் தேதியும், டிசம்பர் 2ஆம் தேதியும் இயக்கப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கல்வி இடைநிற்றலை தவிர்க்க வாகன வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை
உதகை, நவ.29- குழந்தைகள் கல்வியை தொடர வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி நீலகிரி ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ஆட்சி யர் ச.பா.அம்ரீத் தலைமையில் நடைபெற்றது. இதில், செம்ம னாரை பழங்குடியின மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, கோத்தகிரி, கொணவக்கரை ஊராட்சிக்கு உட் பட்ட செம்மனாரை பகுதியில் இருளர் பழங்குடியின மக்கள் 160 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டு, உறைவிட தொடக் கப்பள்ளி உள்ளது. 5 ஆம் வகுப்பு படித்து முடிக்கும் மாண வர்கள் 7 கிலோ மீட்டர் பயணம் செய்து, கெங்கரை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று படிப்பை தொடர வேண்டிய நிலை உள்ளது. தற்போது 36 மாணவர்கள் செம்மனாரை கிரா மத்திலிருந்து கெங்கரை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். ஆனால், முறையான போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தனியார் வாகனங்கள் மூலமாக குழந்தைகளை பள்ளி நிர்வாகம் சார்பில் தினந்தோறும் அழைத்து சென்று வரு கின்றனர். அதற்காக ஒரு மாணவருக்கு ரூ.600 மட்டுமே அரசு சார்பாக வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு மாதத்துக்கு ஒரு மாணவருக்கு தனியார் வாகனத்தில் பயணிக்க ரூ.1500 செல வாகிறது. இதனால், எங்களது குழந்தைகள் பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் எங்களது குழந்தைகள் கல்வி தொடர வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை மனு வினை அளித்தனர்.
நலத்திட்ட உதவிகள்
சேலம், நவ.28- மாற்றுத்திறனாளிக ளுக்கு உதவிடும் வகையில், சேலத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பவுண்டே சன் சார்பில் நலத்திட்ட உத விகள் மற்றும் மானிய கடன் கள் வழங்கப்பட்டு வருகி றது. அதன் ஒரு பகுதியாக திங்களன்று சேலம், பொன் னம்மாப்பேட்டை பகுதியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதர வற்றோர்களுக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் மற்றும் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.