districts

img

குடிநீர் கேட்டு போராட்டக் களமாக மாறும் கிராமங்கள் கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகம்; மக்கள் கோபம்

உடுமலை, மார்ச் 11 - உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக, மக்கள் குடி நீர் கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு  வருகின்றனர். போராட்டக் களமாக மாறியி ருக்கும் இப்பகுதியில் குடிநீர் பிரச்சனையை  கண்டுகொள்ளாமல் ஊராட்சி நிர்வாகம் உள் ளதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். உடுமலை, மடத்துகுளம் தாலூக்கா பகுதி களின் மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி  செய்யும் வகையில் திருமூர்த்தி அணையில்  இருந்து பலவேறு குடிநீர் திட்டங்கள் பெயரில்  குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகி றது. திருமூர்த்தி அணயில் இருந்து முதன்  முதலாக உடுமலை நகராட்சி பகுதிக்கும், பின் னர் கிராம்புற மக்களுக்கு கணக்கம்பாளை யம் கூட்டு குடிநீர் திட்டம், மடத்துகுளம் மற் றும் குடிமங்கலம் பகுதிகள் பூலாங்கிணறு உள்ளிட்ட பகுதிகளுக்கு தனித்தனிக் குடிநீர்  விநியோகம் செய்ய தனி குழாய்கள் மற்றும்  நீர் ஏற்ற நிலையங்கள், மேலும் 24 மணி நேர  தடையில்லா மின்சாரம் என்று அனைத்து வகையிலும் பொது மக்களுக்கு குடிநீர் தடை யில்லாமல் விநியோகம் செய்ய ஏற்பாடு செய் யப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த ஒரு மாத  காலமாக உடுமலை நகராட்சி பகுதி தவிர்த்து  அனைத்து கிராம பகுதிகளுக்கும் முறையாக  குடிநீர் வருவது இல்லை.

கடந்த ஒரு  வாரத்தில் மட்டும் தினமும் குடிநீர் கேட்டு  பொது மக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  பொது மக்களுக்கு குடிநீர் தர அனைத்து ஏற்பாடுகளும் அரசு ஏற்படுத்தி இருக்கும் நிலையில், திருமூர்த்தி அணையிலும் போதிய அளவு நீர் உள்ளது. தினமும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர்  அளவில் குடிநீருக்கு என்று 21 கனஅடி நீர்  தருவதாக கூறப்படும் நிலையில், பொது மக்க ளுக்கு குடிநீர் கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. குறிப்பாக குடிநீர் விநியோகம் மற்றும்  குழாய்கள் பழுதுகளை சரி செய்ய தனியார்  நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தந்துள்ளனர். குழாய் உடைப்புகளை உடன டியாக சரி செய்யாமலும், கிராம ஊராட்சிக ளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நீர் ஏற்ற  நிலையங்களில் போதிய ஊழியர்கள் இல்லா தது மற்றும் மின்மோட்டார்களை தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மேற்கொள்ளாமல் இருப்பதுதான் குடிநீர் பிரச்சனைக்கு கார ணமாக உள்ளது. இனி வரும் காலங்களில் குடிநீர் தேவை அதிமாக இருக்கும் என்பதால், மாவட்ட நிர் வாகம் போர்க்கால அடிப்படையில் பொது  மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வில்லை என்றால், மிகப்பெரிய சட்டம் ஒழுக்கு பிரச்சனையாக மாறும் நிலை ஏற்ப டும். இதை தடுக்க வேண்டும் என்பதே இப்ப குதி மக்கள் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.